தஸ்லிமா நஸ்ரினின் விசா 2010 வரை நீட்டிப்பு
Subscribe to Oneindia Tamil
டெல்லி: சர்ச்சைக்குரிய வங்கதேச எழுத்தாளர் தஸ்லிமா நஸ்ரினின் இந்திய விசா 2010ம் ஆண்டு பிப்ரவரி 16ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.
ஐரோப்பிய நாட்டில் ரகசியமாக வாழ்ந்து வரும் தஸ்லிமா கடந்த 6ம் தேதி டெல்லி வந்தார். அவரை மத்திய உளவுப் பிரிவினர் விமான நிலையத்திலிருந்து உடனடியாக ரகசிய இடத்துக்குக் கொண்டு சென்றனர்.
இவரது இந்தய விசா ஆகஸ்ட் 17ம் தேதி காலாவதியாகிறது. இந் நிலையில் அவர் விசா நீட்டிப்பு கோரி விண்ணப்பித்தார்.
இதையடுத்து இந்தியாவில் நீண்ட காலம் தங்கியிருக்கக் கூடாது என்ற நிபந்தனையுடன் அவரது விசாவை 2010 பிப்ரவரி 16ம் தேதி வரை மத்திய அரசு நீட்டித்துள்ளது.












Click it and Unblock the Notifications