For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

விலைவாசி உயர்வு-பாமகவின் மும்முனை போராட்டம்

By Staff
Google Oneindia Tamil News

நெல்லை: விலைவாசி உயர்வை, வறட்சி, குடிநீர் பஞ்சம் ஆகியவற்றை கண்டித்து விரைவில் பாமக சார்பில் மும்முனை போராட்டம் நடத்தப்படும் என்று பாமக தலைவர் ஜி.கே. மணி கூறினார்.

நெல்லையில் நிருபர்களிடம் அவர் கூறியதாவது,

தென் மாவட்டங்களில் வறட்சியினால் உணவு உற்பத்தி பாதிக்கப்பட்டுள்ளதோடு கடும் குடிநீர் பஞ்சமும் ஏற்பட்டுள்ளது. இதனால் அரிசி, பருப்பு உள்பட அந்தியவாசிய பொருட்களின் விலை உயர்ந்துள்ளது.

இப்பிரச்சனைகளை போக்க மத்திய, மாநில அரசுகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். இல்லையென்றால் பாமக சார்பில் மும்முனை போராட்டம் நடத்தப்படும்.

பம்பை, வைப்பாறு இணைப்பு...

மேற்கு தொடர்ச்சி மலையில் உற்பத்தியாகி வீணாக கடலில் கலக்கும் பம்பா, அச்சன்கோவில் ஆறுகளை வைப்பாற்றுடன் இணைத்தால் நெல்லை, தூத்துக்குடி், ராமநாதபுரம், விருதுநகர் உள்பட 5 லட்சம் ஏக்கருக்கு மேல் பாசன வசதி மேம்படும். இத்திட்டத்தின் மூலம் 1000 மெகாவாட் மின்உற்பத்தியும் கிடைக்கும்.

இத்திட்டத்திற்கு 20 ஆண்டுகளுக்கு முன்பு மத்திய அரசு நீர்வள ஆணையம் ஓப்புதல் அளி்த்தது. ஆனால் கேரள அரசின் முட்டுகட்டையால் இத்திட்டம் நிறைவேற்றப்படாமல் உள்ளது. இதனை நிறைவேற்ற மத்திய அரசை தமிழக அரசு வலியுறுத்த வேண்டும்.

தமிழகம், கர்நாடக மாநிலங்களில் நல்லெண்ண அடிப்படையில் பிரச்சனைகள் தீர்க்கப்பட வேண்டும். ஒகேனக்கல் கூட்டுகுடிநீர் திட்டத்தை நிறைவேற்ற கர்நாடக அரசு ஒத்துழைக்க வேண்டும்.

எதிர் கட்சியினர் மீது பொய் வழக்கு பதிவு செய்து வருவதற்கு கண்டனம் தெரிவிக்கிறோம். இந்த வழக்குகளை உடனடியாக வாபஸ் பெற வேண்டும் என்றார் ஜிகே மணி.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X