சென்னையில் கன மழை-திருப்பதியில் வெள்ளம்
சென்னை: சென்னையில் நேற்று கன மழை பெய்தது. இந்த மழை இன்றும் தொடரும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
நேற்று இரவு லேசான தூறலாக ஆரம்பித்த மழை பின்னர் வலுவடைந்து கன மழையாக மாறியது. ராயபுரம், வண்ணாரபேட்டை, தி.நகர், மடிப்பாக்கம், ஆதம்பாக்கம், மாதவரம், புளியந்தோப்பு, திருவல்லிக்கேணி, கொடுங்கையூர் ஆகிய பகுதிகளில் சுமார் 3 மணி நேரத்துக்கு மேலாக மழை விடாது பெய்தது.
திண்டுக்கல்லில் மழை...
அதே போல் மாலை திண்டுக்கல்லிலும் நல்ல மழை பெய்தது. இந்த மழை இன்று காலை வரை நீடித்தது.
திருப்பதியிலும்...
அதே போல திருப்பதி மலையில் நேற்று பிற்பகலில் ஆரம்பித்த கன மழை இரவு வரை பெய்தது. இதனால் திருப்பதி கோவிலுக்குள் வெள்ளம் புகுந்தது.
இதையடுத்து தீயணைப்பு படையினர் வந்து மோட்டார் பம்புகள் மூலம் நீரை வெளியேற்றினர்.
விடிய விடிய மழை கொட்டியதால் பக்தர்கள் கடும் அவதிக்குள்ளாயினர். பிளாட்பாரம் மற்றும் திறந்த வெளி பகுதிகளில் இருந்த பக்தர்கள் நிற்க இடமில்லாமல் தவித்தனர்.
இலங்கையில் தவிக்கும் தமிழர்கள்..
இந்த நிலையில், இலங்கையில் பெய்த கன மழையால் முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ள லட்சக்கணக்கான தமிழர்கள் பெரும் துயரத்துக்குள்ளாகியுள்ளனர்.
முகாம்களில் அமைக்கப்பட்டுள்ள தாற்காலிக கூடாரங்கள் நீரால் சூழப்பட்டுள்ள நிலையில் அவர்கள் கொட்டும் மழையிலும் சகதியிலும் அவதிப்பட்டு வருகின்றனர்.
-
சென்னையில் ஷாக்! போலீசாரின் பிடியில் சிக்கிய மனைவியின், கழுத்தை அறுத்து கணவனே கொலை செய்த கொடூரம் -
சென்னையில் கொடூர சம்பவம்.. கஞ்சா விற்பனையை தட்டிக்கேட்ட இளைஞர் அம்மிக்கல்லால் அடித்து கொலை! -
அமைச்சர் ராஜ்மோகன் கையால் பட்டம் வாங்க மறுத்து மாணவர் செய்த செயல்! சென்னை கல்லூரியில் நடந்த பரபரப்பு -
தலைமை செயலக பகுதியில் திடீரென புகை மூட்டம்! மூச்சுத்திணறலால் பொதுமக்கள் அவதி.. சென்னையில் பரபரப்பு -
மெரினா கடற்கரைக்கு அடியில் அதிசயம்! சென்னை மெட்ரோ 2ம் கட்டத்தில் மாஸ்: லைட்ஹவுஸ் நிலையம் உருவாகிறது -
சென்னை–மும்பை தேசிய நெடுஞ்சாலையில் மூடப்பட்ட ஒரு வழிப்பாதை.. வாலாஜாபேட்டையில் தவிக்கும் வாகனங்கள் -
மயிலாப்பூர் டூ அம்பத்தூர்.. கார் இருந்தாலும் சைக்கிள் பயணம்! உலக சைக்கிள் தினத்தில் அறிய வேண்டிய கதை -
சென்னையில் இன்று இடி, மின்னலுடன் மழை கொட்டப் போகுது.. தமிழகம் முழுக்க 22 மாவட்டங்களுக்கு எச்சரிக்கை -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம்












Click it and Unblock the Notifications