ஆஸி.யில் இந்திய டாக்டரை தாக்கியவர் கைது
மெல்போர்ன்: ஆஸ்திரேலியாவில் இந்திய டாக்டர் தாக்கப்பட்ட வழக்கில் ஒருவரை கைது செய்திருப்பதாக அந்நாட்டு போலீசார் தெரிவி்த்துள்ளனர்.
இந்தியாவை சேர்ந்த டாக்டர் முகேஷ் ஹெய்கர்வால் ஆஸ்திரேலியாவில் பணிபுரிந்து வந்தார். அவர் ஆஸ்திரேலியாவின் மெடிக்கல் அமைப்பின் தலைவராகவும் இருந்துள்ளார்.
இந்நிலையில் கடந்த ஆண்டு செப்டம்பர் 27ம் தேதி மெல்போர்னில் இருக்கும் வில்லியம்ஸ்டவுன் பகுதியில் சென்று கொண்டிருந்த போது அவர் கொள்ளையர்களால் தாக்கப்ப்டடார். அந்த கும்பல் அவரை அடித்து, உதைத்து துன்புறுத்தியது.
பின்னர் அவரை கீழே தள்ளி, பேஸ்பால் மட்டையால் தலையில் அடித்துள்ளது. இதில் டாக்டர் முகேசுக்கு மூளையில் இரண்டு இடங்களில் ரத்தம் உறைந்து போனது. அவரது மண்டை ஓட்டில் லேசான விரிசலும் ஏற்பட்டது. இதையடுத்து அவருக்கு உடனடியாக அறுவை சிகிச்சை செய்யப்பட்டது. தற்போது அவர் கோமாவில் சுய நினைவின்றி கிடக்கிறார்.
இது தொடர்பாக ஆஸ்திரேலிய போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்நிலையில் அவர்கள் நேற்று இந்த வழக்கு தொடர்பாக அசோபார்டி என்ற 20 வயது இளைஞனை கைது செய்தனர்.
இதை தவிர்த்து அந்த நபர் மீது மேலும், 43 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்த வழக்கை விசாரித்த நீதிபதி அமந்தா சாம்பர்ஸ் வழக்கின் அடுத்தகட்ட விசாரணை நவம்பரில் நடத்தப்படும் என்றும், அதுவரை அவரை சிறையில் அடைக்குமாறும் உத்தரவிட்டார்.












Click it and Unblock the Notifications