9 மாநிலங்கள் வறட்சி பாதித்தவையாக அறிவிப்பு

உள்நாட்டுப் பாதுகாப்பு தொடர்பாக டெல்லியில் நடந்த முதல்வர்கள் மாநாட்டில் பேசிய அவர், இத் தகவலைத் தெரிவித்தார்.
பவார் கூறுகையில், நாட்டின் உள்நாட்டுப் பாதுகாப்பு எவ்வளவு முக்கியமோ அதே போல உணவுப் பாதுகாப்பும் முக்கியம்.
தாமதமான மழை காரணமாக உத்தரப் பிரதேசம், மகாராஷ்டிரம், அஸ்ஸாம், பிகார், ஹிமாச்சலப் பிரதேசம், ஜார்க்கண்ட், மணிப்பூர், நாகலாந்து ஆகிய 9 மாநிலங்களும் தங்களை வறட்சி பாதித்த பகுதிகளாக அறிவித்து தேசிய இடர் நிவாரண நிதியில் இருந்து நிதியுதவி கோரியுள்ளன.
இந்த மாநிலங்களில் நிலைமையை ஆராய்ந்துள்ள மத்திய அரசு முதல் கட்டமாக உத்தரப் பிரதேசம், பிகார், அஸ்ஸாம், ஜார்க்கண்ட் மாநிலங்களுக்கு முதல் கட்டமாக நிதியை ஒதுக்கியுள்ளது.
இந்த மாநிலங்களில் அறுவடைக்காக காத்திருக்கும் பயிர்களைக் காக்க இந்த நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. அடுத்த கட்டமாக போதுமான விதைகளை இருப்பு வைக்க நிதி ஒதுக்கப்படும்.
மாநில அரசுகள் வறட்சியால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் குறுகிய கால பயிர்களை பயிர் செய்ய தேவையான நடவடிக்கை எடுக்க வேண்டும். இதற்காக விவசாயிகளுக்கு தேவையான உதவிகளை செய்ய வேண்டும் என்றார்.
வறட்சி..பீதி வேண்டாம்- பிரதமர்:
இந்த மாநாட்டில் தொடக்க உரையாற்றிய பிரதமர் மன்மோகன் சிங் வறட்சி நிலை கண்டு பீதி அடையத் தேவையில்லை என்றார்.
பிரதமர் பேசுகையில், வறட்சி நிலை பீதியை ஏற்படுத்தும் வகையில் இல்லை. இந்த நெருக்கடியை எப்படி சமாளிப்பது என்பது குறித்த அறிவு அரசிடம் உள்ளது. மேலும் கோதுமை, அரிசி உள்ளிட்டவை நமது கிட்டங்கிகளில் போதிய அளவுக்கு இருப்பும் உள்ளது.
வறட்சி நிலையை சமாளிக்க மத்திய அரசு அமல்படுத்தி வரும் ஊரக வேலைவாய்ப்பு உத்தரவாத திட்டம், தேசிய விவசாய வேலைவாய்ப்புத் திட்டம் ஆகியவை கை கொடுக்கும் என்றார்.












Click it and Unblock the Notifications