பிகாரில் ஐஏஎஸ் அதிகாரிக்கு பன்றி காய்ச்சல்
பாட்னா: இதுவரை பன்றி காய்ச்சல் பரவாமல் இருந்த பிகாரிலும் முதல் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. லண்டனில் இருந்து பிகார் திரும்பிய ஐஏஎஸ் அதிகாரிக்கு பன்றி காய்ச்சல் உறுதி செய்யப்பட்டுள்ளது.
நாடு முழுவதும் பன்றி காய்ச்சல் வேகமாக பரவி வந்த நிலையில் பிகார் மாநிலத்தில் நேற்று வரை இந்த நோய் பரவியதற்கான அறிகுறி இல்லாமல் இருந்தது.
ஆனால், தற்போது சமீபத்தில் லண்டன் சென்று திரும்பிய ஐஏஎஸ் அதிகாரி ஒருவருக்கு பன்றி காய்ச்சல் இருப்பது பரிசோதனையில் உறுதி செய்யப்பட்டுள்ளது. இதையடுத்து அவர் தனது வீட்டில் மருத்துவர்கள் பார்வையில் வைக்கப்பட்டுள்ளார்.
அவருக்கு புரோபைலேக்டிக் டாமிப்ளூ மாத்திரைகள் வழங்கப்பட்டுள்ளன. இதையடுத்து பிகார் மாநில அரசு விரைவில் வைரஸ் சோதனை மையம் ஒன்றை பாட்னாவில் துவக்க வேண்டும் என மத்திய அரசை கேட்டு கொண்டுள்ளது.
ஒரே நாளில் 220 பேருக்கு பரவியது...
இந்நிலையில் நேற்று ஒரே நாளில் மட்டும் பன்றி காய்ச்சல் 220 பேருக்கு பாதிப்பை ஏற்படுத்தியிருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் அதிகபட்சமாக மும்பையில் 90 பேரும், புனேவில் 42 பேரும் பாதிக்கப்பட்டுள்ளனர். சென்னையில் 20, பெங்களூரில் 11 பேருக்கு இந்த காய்ச்சல் உறுதி செய்யப்பட்டுள்ளது.
மகராஷ்டிராவில் தான் பெரிய அளவில் பாதிப்பை ஏற்படுத்தி வருவதால், அந்த மாநிலத்தில் உள்ள அனைத்து பள்ளிகளிலும் மாணவர்களுக்கு ஸ்வைன் ப்ளூ அறிகுறிகள் இருக்கிறதா என்பதை ஆசிரியர்கள் ஆய்வு செய்ய வேண்டும். அறிகுறிகளுடன் இருக்கும் மாணவர்களை உடனடியாக மருத்துவமனையில் அனுமதிக்க வேண்டும் என மகாராஷ்டிர சுகாதார துறை வேண்டுகோள் விடுத்துள்ளது.
-
சொத்து வைத்திருப்போர் கவனத்திற்கு! ஏப்.1 முதல் பத்திரப்பதிவில் பெரிய மாற்றம்.. இனி நிலம் இந்த விலை? -
கேஸ் சிலிண்டர் விலை மாறுது! ஏப்.1 முதல் புதிய விலை! இல்லத்தரசிகள் மாத பட்ஜெட்டில் என்ன தாக்கம்? -
H-1B விசா கட்டுப்பாடுகள் நீக்கம்.. அமெரிக்காவில் முக்கிய மசோதா.. இதுதான் இந்தியர்களுக்கு நல்ல செய்தி -
இதுக்கு மேல கடன் வாங்க முடியாது.. கஜானா காலி.. தத்தளிக்கும் தமிழக வெற்றிக் கழகம்.. அப்போ விஜய்? -
தங்கம்.. 'தரை' தட்டியது ஏன்? கூடை கூடையாக மார்க்கெட்டில் விற்ற அரபு நாடுகள்.. ஒரு ராட்சனின் வீழ்ச்சி -
வளைகுடா வளையம்: ஈரானிடம் இந்தியா வைத்த 'செக்'.. தவிப்பில் கச்சா எண்ணெய்! டெல்லி மெகா முடிவு -
திமுக வேட்பாளர் நேர்காணலில் பங்கேற்ற துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின்.. என்ன கேட்கப்பட்டது என விளக்கம் -
இமாச்சல் போல.. தமிழகத்தில் அரசு ஊழியர்களின் மாத சம்பளத்தை 30% குறைக்க வேண்டியது வரும்.. அன்புமணி -
டிராகனின் வெள்ளி வேட்டை.. சீனாவைச் சுழற்றியடிக்கும் சில்வர் ஜுரம்.. வெள்ளி இனி குட்டித்தங்கம்.. ஏன்? -
முதல் விக்கெட்.. திமுக கூட்டணியில் விலகிய தமிழக வாழ்வுரிமை கட்சி.. அறிவித்தார் வேல்முருகன் -
Siragadikka Aasai Promo: விஜயாவுக்கு எதிராக ஆதாரத்தை கண்டுபிடித்த முத்து- மீனா.. சிந்தாமணிக்கு ஆப்பு! செம சம்பவம் -
நன்றியய்யா நன்றி.. ஓட்டல் ஓனர்கள் வயிற்றில் பால் வார்த்த அறிவிப்பு! இனி சிலிண்டர் தட்டுப்பாடு இல்லை!












Click it and Unblock the Notifications