இந்தோனேசியாவில் மீண்டும் நிலநடுக்கம்
ஜகார்த்தா: இந்தோனேசியாவின் சுமத்ரா தீவில் நேற்று இரவு லேசான நிலநடுக்கம் ஏற்பட்டது இது ரிக்டர் அளவில் சுமார் 5.6 ஆகப் பதிவாகியுள்ளது.
அமெரிக்காவின் மேற்கு கடற்கரை பகுதி மற்றும் ஆசியா மற்றும் ஆஸ்திரேலியாவின் கிழக்கு கடற்கரை பகுதிகளை பிசிபிக் ரிங் ஆப் பயர் என்று அழைக்கின்றனர். இங்கு தான் உலகின் 90 சதவீத பூகம்பங்கள் சம்பவிக்கின்றன.
இந்த பகுதியில் அமைந்திருக்கும் இந்தோனேசியாவின் சுமத்ரா தீவின் வட பகுதியில் நேற்று இரவு சுமார் 11.28 நிமிடத்துக்கு மிதமான பூகம்பம் ஒன்று ஏற்பட்டது. இதனால், வீடுகள் குலுங்கின. மக்கள் பீதியில் வீட்டைவிட்டு வெளியேறி தெருவில் வந்து குவிந்தனர்.
இது ரிக்டர் அளவு கோலில் 5.6 ஆக அளக்கப்பட்டு்ள்ளது. இது தானக் பாயா என்ற நகரில் இருந்து 87 கிமீ தென் கிழக்கில் 32 கிமீ ஆழத்தில் மையம் கொண்டது.
இதில் ஏற்பட்ட சேதம் குறித்து உடனடியாக எந்த தகவலும் கிடைக்கவில்லை. இது இந்தோனேசியாவில் கடந்த ஒரு வாரத்துக்குள் நடக்கும் மூன்றாவது பூகம்பம்.












Click it and Unblock the Notifications