ஸ்வைன்: மேலும் 3 பேர் - இதுவரை 38 பேர் மரணம்
டெல்லி: பன்றிக் காய்ச்சலுக்கு மேலும் 3 பேர் உயிரிழந்தனர். இதையடுத்து பன்றிக் காய்ச்சலுக்குப் பலியானோரின் எண்ணிக்கை 38 ஆக உயர்ந்துள்ளது.
சிங்கப்பூரில் இருந்து டெல்லி வந்த 38 வயதுப் பெண் ஒருவர் பன்றிக் காய்ச்சலால் இறந்தார். அவரைத் தொடர்ந்து 31 வயது வாலிபரும் இன்று இறந்தார்.
பெங்களுரில் நேற்று 45 வயதான எட்வர்ட் டேவிட், 36 வயதான கல்பனா ஆகியோர் பன்றிக் காய்ச்சல் நோய்க்குப் பலியாயினர். இதில் டேவிட், கன்னிங்காம் ரோட்டில் உள்ள ஷிபா மருத்துவமனையிலும், கல்பனா மத்திகரேயில் உள்ள எம்.எஸ்.ராமையா மருத்துவமனையிலும் பலியாயினர்.
அதே போல மகாராஷ்டிர மாநிலம் ஓளரங்காபாத்தில் அர்ஜூன் பிகாரி என்ற 40 வயது விவசாயியும் பலியாகியுள்ளார்.
புனேவில் விஜய் அவகடே என்பரும் பன்றிக் காய்ச்சலுக்குப் பலியானார். இவரைத் தவிர புனே சசூன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள மேலும் 3 பேரின் நிலைமை மோசமாக உள்ளது.
நாசிக்கில் மேலும் 2 பேர் பன்றிக் காய்ச்சலுக்கு பலியானாதாக செய்திகள் வந்தாலும் அவை உறுதிப்படுத்தப்படவில்லை.
இவர்கள் தவிர உத்தரகாண்ட், சட்டீஸ்கர், குஜராத் ஆகிய மாநிலங்களில் தலா ஒருவர் உயிரிழந்தனர். இதையடுத்து நாடு முழுவதும் 38 பேர் இந்த நோய்க்குப் பலியாகியுள்ளனர்.
இதில் மகாராஷ்டிரத்தில் அதிகபட்சமாக 20 பேரும், இதில் 15 பேர் புனேவைச் சேர்ந்தவர்கள், கர்நாடகத்தில் 7 பேரும், குஜராத்தில் 4 பேரும், டெல்லி, சட்டீஸ்கரில் தலா இருவரும், தமிழகம், உத்தரகாண்ட், கேரளத்தில் தலா ஒருவரும் பலியாகியுள்ளனர்.
நேற்று மட்டும் 216 பேர் பன்றிக் காய்ச்சல் அறிகுறியுடன் நாடு முழுவதும் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இதில் மும்பையில் 48 பேரும், புனேவில் 36 பேரும், சென்னையில் 30 பேரும், டெல்லியில் 25 பேரும் அனுமதிக்கப்ப்டடுள்ளனர்
இதனால் இந்த நோய் பாதிப்புக்குள்ளானவர்கள் எண்ணிக்கை 2,242 ஆக உயர்ந்துள்ளது.
-
அசுர வேகத்தில் தயாராகும் சென்னை-பெங்களூரு எக்ஸ்பிரஸ்வே! பயண நேரத்தில் அதிரடி மாற்றம் ஜூன் 2026 -
பிஎஃப் பணம்.. மாத சம்பளம் வாங்குவோருக்கு முக்கிய அறிவிப்பு.. சென்னை உள்பட 10 இடங்களில் முகாம் -
Gold Investors: தங்கம் விலை தொடர் சரிவு! முதலீட்டாளர்களுக்கு நஷ்டம்? என்ன நடக்கிறது? -
சென்னையின் தலையெழுத்தை மாற்றும் ப்ராஜெக்ட்.. ரெடியாகும் 'ரூட் மேப்'... எகிறப்போகும் வேகம்! -
வாகன ஓட்டிகளுக்கு குஷி.. தடம் தெரியாமல் மாறும் தமிழ்நாடு நெடுஞ்சாலைத் துறை? புது ப்ளூபிரிண்ட் ரெடி! -
சென்னை.. தேர்தல் பறக்கும் படையிடம் சிக்கிய "ஏகே 47.." விசாரணையில், யாரும் எதிர்பார்க்காத ட்விஸ்ட் -
சென்னை தங்க பஸ்சில் நடந்த சம்பவம்.. கொஞ்சம் பொறுப்போட நடங்க! பயணிகளுக்கு நெட்டிசன்கள் அட்வைஸ் -
'மிஷன் இம்பாசிபிள்.. மெரினா டூ மடிப்பாக்கம்... பறக்கும் சென்னை.. தரம் தெரியாமல் மாறப்போகிறது! -
பெங்களூரில் 5 வருட காதல் கணவனை மர்ம உறுப்பிலேயே... ஓங்கி மிதித்த பெண்.. அடுத்து நடந்த ட்விஸ்ட் -
பறவை காய்ச்சல் மனிதர்களுக்கு பரவுமா? சென்னையில் பீதி.. பொது சுகாதாரத்துறை விளக்கம் -
ரயில்கள் மீது கல் வீசினால் 10 ஆண்டு ஜெயில் தண்டனை.. சென்னை ரயில்வே கோட்டம் கடும் எச்சரிக்கை! -
"நாய்கள் குரைப்பதால் தூங்க முடியவில்லை".. புகாரளித்த பெண்.. போலீஸ் செய்த வேலையை பாருங்க












Click it and Unblock the Notifications