காசு கொடுத்து ஓட்டு வாங்கிய காங். காமராஜர் ஆட்சி பற்றிப் பேசலாமா? கொ.மு.க.
சென்னை: தொண்டாமுத்தூரில் வாக்காளர்களுக்கு காங்கிரஸார் காசு கொடுத்து ஓட்டுக்களை வாங்கியுள்ளனர். அப்படிப்பட்ட காங்கிரஸார் காமராஜர் ஆட்சி குறித்தெல்லாம் பேசக் கூடாது என்று கொங்கு நாடு முன்னேற்றக் கழக பொதுச் செயலாளர் ஈஸ்வரன் கூறியுள்ளார்.
ஈஸ்வரன் சென்னையில் நேற்று நிருபர்களிடம் பேசுகையில்,
தற்போது, நடந்த இடைத்தேர்தலில் தொண்டாமுத்தூர் தொகுதியில் கொங்குநாடு முன்னேற்ற கழகம் சார்பில் நான் போட்டியிட்டேன். தேர்தல் தேதி அறிவிப்பு வந்த நாளில் இருந்து ஆளும் கட்சியினர் எங்களை பிரசாரம் செய்ய விடவில்லை. பணம் கொடுத்தவர்களை கையும் களவுமாக பிடித்து கொடுத்தால், எங்கள் கட்சியினர் மீதே போலீசார் வழக்கு போடுகிறார்கள்.
ஒளிவு மறைவு இல்லாமல் பணம் கொடுப்பதை தடுக்க முடியாத ஓர் தேர்தல் ஆணையம் தேவைதானா?. தமிழக தேர்தல் அதிகாரி நரேஷ் குப்தா கடமை தவறிவிட்டாரே?. பணம் கொடுப்பதை தடுக்க தன்னால் முடியவில்லை என்றால் வேறு பதவிக்கு அவர் சென்று விடலாம்.
தொண்டாமுத்தூர் தொகுதியில் காசு கொடுத்து ஓட்டு வாங்கிய காங்கிரஸ்காரர்கள் இனிமேல் காமராஜர் ஆட்சி பற்றி பேசக்கூடாது.
கொங்குநாட்டு பிரச்சினைகளை அரசு கவனத்திற்கு கொண்டுவர, கொங்குநாடு முன்னேற்ற கழகம் தொடங்கப்பட்டது. கொங்கு நாட்டில் சாயக்கழிவுதான் மிகப் பெரிய பிரச்சினை. இந்த பிரச்சினைக்கு தீர்வுகாண கடந்த 2 ஆண்டுகளாக போராடி வருகிறோம்.
தற்போது, மத்திய ஜவுளித்துறை அமைச்சர் தயாநிதிமாறன், துணை முதல்வர் மு.க.ஸ்டாலின் ஆகியோர் சாயக்கழிவு பிரச்சினை தொடர்பாக பிரதமர் மன்மோகன்சிங்கிடம் பேசி, நிதி உதவி கேட்டுள்ளனர். இதனால், சாயக்கழிவு பிரச்சினைக்கு தீர்வு கிடைத்துவிடும் என்ற நம்பிக்கை எங்களுக்கு வந்துள்ளது. இதற்காக மு.க.ஸ்டாலின், தயாநிதிமாறன் ஆகியோருக்கு நன்றியை தெரிவித்துக் கொள்கிறோம் என்றார் ஈஸ்வரன்.
-
இந்தி மாநிலங்களுக்கு போகும் "ரியல்" பவர்? 816ஆக உயரும் தொகுதிகள்.. மறுசீரமைப்பில் என்ன நடக்கும் -
RTE admissions: தனியார் பள்ளிகளில் இலவச கல்வி! ஆர்டிஇ சேர்க்கை எப்போது? யாரெல்லாம் விண்ணப்பிக்கலாம்? -
ஓசூர், சேலம், சென்னை.. 24 மணிநேரத்தில் 3000 கோடியில் 3 மெகா முதலீடுகள்.. தேர்தல் நேரத்திலும் மாஸ்! -
கொளுத்தும் வெயில்.. தமிழ்நாட்டில் நடத்த 2 முக்கிய விஷயம்..!! -
சூடுபிடிக்கும் தேர்தல் களத்தில்.. கொட்டி தீர்க்க போகுது மழை.. 2 நாட்களுக்கு குளுகுளு கிளைமேட் தான்! -
நாத்திகவாதி என சொல்லிவிட்டு.. தாய்க்கு கிறிஸ்துவ முறைப்படி இறுதி சடங்கு ஏன்! பிரகாஷ் ராஜ் விளக்கம் -
மீண்டும் பிரம்மாஸ்திரத்தை கையில் எடுக்கும் மத்திய அரசு.. ரூ.2.5 லட்சம் கோடி மெகா திட்டம்! -
20,000 பாடல்கள் பாடிய சுஜாதாவிற்கு இப்படி ஒரு பிரச்சனையா? 5 வருடங்களாக பாடாத காரணம்! உருக்கம் -
யூடியூபரை பார்க்க கோவை டூ சென்னை.. 4 பள்ளி மாணவிகள் செயல்.. பெற்றோர் அறிய வேண்டிய பாடம் -
2020ல் 10 லட்சத்திற்கு வாங்கியிருந்தால் இன்று1.7 கோடி ரூபாய்.. இந்தியன் வங்கி மேஜிக் -
டெல்லி போட்ட ஸ்கெட்ச்.. எடப்பாடி 'மூவ்'.. நள்ளிரவில் மாறிய தமிழக டிஜிபி.. விறுவிறு பின்னணி! -
விஜய் சேதுபதிக்கு கடன்! 25 லட்சத்தை வாரி வழங்கிய ஆதவ் அர்ஜுனா.. பிரமாண பத்திரத்தில் கசிந்த ரகசியம்












Click it and Unblock the Notifications