திட்டமிட்டபடி 'உலகத் தமிழர் பிரகடனம்' -நெடுமாறன்
அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்,
ஈழத்தமிழர் வாழ்வுரிமைக்கான 'உலகத் தமிழர் பிரகடனம்' வெளியிடும் நிகழ்ச்சி இன்று மாலை 6 மணிக்கு சென்னை அமைந்தகரை புல்லா அவென்யூ சாலையில் நடைபெறும்.
இக்கூட்டத்தில் பாமக நிறுவனர் ராமதாஸ், மதிமுக பொதுச் செயலாளர் வைகோ, இந்திய கம்யூனி்ஸ்ட் மாநிலச் செயலாளர் தா.பாண்டியன் உள்ளிட்டோர் உரையாற்றுகிறார்கள்.
தமிழர் வரலாற்றில் இதுவரை இல்லாத வகையில் முதன்முறையாக உலகத் தமிழர் பிரகடனம் வெளியிடப்பட இருக்கிறது. உலகறிய நாம் செய்யவிருக்கிற இந்தப் பிரகடனம் ஈழத் தமிழர்களுக்கும், உலகத் தமிழர்களுக்கும் வழிகாட்டும் பிரகடனமாகும்.
எனவே, இக்கூட்டத்தில் கட்சி, சாதி, மத வேறுபாடில்லாமல் அனைத்து தமிழர்களும் திரளாகக் கலந்து கொள்ள வேண்டுமாறு கேட்டுக் கொள்கிறேன் என்று கூறியுள்ளார்.
தடை செய்யப்பட்ட இயக்கங்களுக்கு ஆதரவாக செயல்படுவோர் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என்று தமிழக அரசு எச்சரித்துள்ள நிலையில், இக் கூட்டம் நடக்கிறது.
இதனால் வைகோ, ராமதாஸ், நெடுமாறன், தா.பாண்டியன் உள்ளிட்டோர் மீது கைது நடவடிக்கை பாயும் என்று செய்திகள் வருவது குறிப்பிடத்தக்கது.