பூகம்பம்: ஜப்பான் அணு உலையில் லேசான கசிவு
டோக்கியோ: சமீபத்தில் ஜப்பானில் ஏற்பட்ட நிலநடுக்கத்தின் போது ஹமோக்கா அணுசக்தி உலையில் லேசான கதிரியக்க கசிவுஏற்பட்டுள்ளது. ஆனால், இது பயப்படும்படி இல்லை என ஜப்பான் தெரிவித்துள்ளது.
உலகின் இரண்டாவது பெரிய பொருளாதாரத்தை கொண்ட ஜப்பானில் நிலக்கரி போன்றவை அதிகளவில் இல்லாததன் காரணமாக அந்நாடு மின்சார தேவையில் சுமார் 30 சதவீதத்தை அணு உலைகளின் மூலம் பெறுகிறது.
இந்நிலையில் கடந்த 11ம் தேதி ஜப்பானின் சுருகா பே பகுதியில் சுமார் 6.4 ரிக்டர் பூகம்பம் பதிவானது. இதில் ஒருவர் பலியானார். சுமார் 120 பேர் காயமடைந்தனர்.
தற்போது அந்த பூகம்பத்தின் போது சுருகா பே பகுதிக்கு அருகிலுள்ள ஹமோக்கா அணு உலையில் லேசான கதரியக்க கசிவு ஏற்பட்டுள்ளது தெரிய வந்துள்ளது.
இதை அங்கு மின் உற்பத்தி செய்து வரும் சிபு மின்சார நிறுவனமும் உறுதி செய்துள்ளது. அந்நிறுவனத்தின் அதிகாரி ஒருவர் கூறுகையில்,
சிறிய அளவில் கசிவு ஏற்பட்டுள்ளது. அணு உலையின் ஒரு பகுதியில் அயோடின்-133 என்ற கதிரியக்க தனிமத்தின் கசிவு கண்டுபிடிக்கப்பட்டது. இதனால் மனிதர்களுக்கு எந்த பாதிப்பும் ஏற்படாது. ஒரு ஆண்டு காலத்துக்கு பின்னர் இது மனிதர்களுக்கு லேசான பாதிப்பை ஏற்படுத்தும் அளவில் 20 ஆயிரத்தில் 1 பங்கு என்ற அளவு தான் இருக்கும் என்றார்.












Click it and Unblock the Notifications