54 ஆண்டுகளுக்கு பின் ஜாப்பானில் ஆட்சி மாற்றம்!
டோகியோ: ஜப்பான் நாட்டு தேர்தல் முடிவுகள் எதிர்கட்சியினருக்கு சாதகமாக இருக்கும். இதையடுத்து சுமார் 54 ஆண்டுகளுக்கு பின் ஆட்சிமாற்றம் உண்டாகும் என தேர்தலுக்கு முந்தைய கருத்துக்கணிப்புகள் தெரிவித்துள்ளன.
ஜப்பானில் தற்போது சுதந்திர ஜனநாயக கட்சியின் ஆட்சி நடைபெற்று வருகிறது. பிரதமர் டாரோ அசோவின் தலைமையிலான இக்கட்சிக்கு வரும் 30ம் தேதி நடக்கவிருக்கும் தேர்தலில் பெருத்த பின்னடைவு ஏற்படும் என அந்நாட்டில் இருந்து வெளியாகும் கருத்துக்கணிப்புகள் தெரிவித்துள்ளன.
சமீபத்தில் ஜப்பானை சேர்ந்த யோமியூரி, நிக்கி பத்திரிகைகள் தொலைபேசி மூலம் கருத்துக்கணிப்பு நடத்தியது. அதன் முடிவை நேற்று வெளியிட்டது. அதில்,
வரும் தேர்தலில் எதிர்கட்சி மொத்தமுள்ள 480 இடங்களில் 300யை கைப்பற்றும். இதனால் சுமார் 54 ஆண்டுகளுக்கு பின் ஜப்பானில் ஆட்சிமாற்றம் ஏற்பட இருக்கிறது.
பொருளாதார மந்தம் ஏற்பட்டுள்ள நிலையில் நாட்டின் வளர்ச்சியை தூரிதமாக்குவோம் என்ற எதிர்கட்சியின் பிரச்சாரத்துக்கு நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது. மேலும், அசோவின் கட்சியினர் மீது சமீபகாலமாக எழுந்து வரும் ஊழல் குற்றச்சாட்டுக்களால் மக்கள் அதிருப்தியடைந்துள்ளனர்.
ஆனால், 20 சதவீதம் மக்கள் இன்னும் என்ன செய்வது என்று தீர்மானிக்கவில்லை. இதனால் எதிர்கட்சியனருக்கு கிடைக்கும் இடங்களில் சிறிய அளவில் மாற்றங்கள் ஏற்படலாம் என தெரிவித்துள்ளது.












Click it and Unblock the Notifications