பாலாறு- ஆந்திராவை வளைக்க அண்ணாவைப் பயன்படுத்தும் தமிழக அரசு
சென்னை: திருவள்ளுவர், சர்வக்னர் சிலைகள் திறப்பின் மூலம் கர்நாடகத்துடனான உறவையும், நட்பையும் வலுவாக்கிக் கொண்டு விட்ட நிலையில், தற்போது அண்ணா நூற்றாண்டு விழாவை முன்வைத்து ஆந்திராவுடனான உறவை வலுப்படுத்திக் கொள்ளவும், பாலாறு பிரச்சினைக்குத் தீர்வு காணவும் களம் இறங்கியுள்ளது திமுக அரசு.
தமிழக அரசு சமீபகாலமாக அண்டை மாநிலங்களுடனான உறவை மேம்படுத்த முயற்சித்து வருகிறது. சமீபத்தில் பெங்களூரில் திருவள்ளுவர் சிலையும், சென்னையில் கன்னடக் கவிஞர் சர்வக்ஞரின் சிலையும் திறக்கப்பட்டது. இதையடுத்து இரு மாநிலங்களுக்கு இடையே இருந்த கசப்புணர்வுகள் மறக்கப்பட்டு சுமூக உறவு வளர்ந்து வருகிறது.
மற்றொரு அண்டை மாநிலமான ஆந்திரா நமக்கு எப்போதும் நட்புடையதாக தான் இருந்து வந்தது. ஆனால், தற்போது சித்தூர் மாவட்டத்தில் பாலாற்றின் குறுக்கே அணை கட்ட மேற்கொண்டு வரும் ஆந்திர அரசின் நடவடிக்கை இரு மாநிலங்களின் உறவில் லேசான விரிசலை ஏற்படுத்தியுள்ளது. இந்த அணை கட்டப்பட்டால் வட தமிழகம் வறண்டு போய்விடும் என்பதால் இதை தடுக்க தமிழகம் முயற்சித்து வருகிறது.
இது தொடர்பாக மத்திய அரசிடம் முறையிட்ட தமிழக அரசு, உச்ச நீதிமன்றத்திலும் வழக்கு தொடர்ந்துள்ளது.
இந்நிலையில் கர்நாடக முதல்வர் எதியூரப்பாவை சென்னைக்கு அழைத்து வந்து அவரது வாயால் அனைத்துப் பிரச்சினைகளுக்கும் பேச்சுவார்த்தை நடத்தித் தீர்வு காணலாம் என கூற வைத்ததை போல் ஆந்திர முதல்வர் ராஜசேகர ரெட்டியையும் மடக்கும் முயற்சியில் தமிழக அரசு இறங்கியுள்ளது.
இதற்கு அடுத்த மாதம் 15ம் தேதி நடக்கவிருக்கும் அண்ணா நூற்றாண்டு விழாவை பயன்படுத்தி கொள்ள திட்டமிட்டுள்ளது. இந்த விழாவில் ராஜசேகர ரெட்டியை பங்கேற்க வைக்கும் முயற்சிகள் தற்போது நடந்து வருகிறது.
இதற்காக தமிழக அரசின் விளம்பரத்துறை அமைச்சர் பரிதி இளம்வழுதி நேற்று ஹைதராபாத்துக்கு நேரடியாக சென்று ஆந்திர முதல்வருக்கு அழைப்பிதழ் கொடுத்துள்ளார்.
5 ரூபாய் நாணயம் வெளியிடப்படும்...
பின்னர் அவர் நிருபர்களிடம் கூறுகையில்,
அண்ணா நூற்றாண்டு விழாவை பெரிய அளவில் கொண்டாட திட்டமிட்டுள்ளோம். இந்த விழாவுக்கு ஆந்திர முதல்வர் வருவார் என்ற நம்பிக்கை இருக்கிறது.
விழாவை முன்னி்டடு மத்திய அரசு, அண்ணாவின் பேச்சுக்களையும் ஆயிரக்கணக்கான பிரதி எடுத்து வினியோகிக்க இருக்கிறது. மேலும், 5 ரூபாய் நாணயங்களை வெளியிட இருக்கிறது என்றார்.
-
அமெரிக்காவால் ஈரானுக்கு தங்க புதையல்.. ஹார்முஸ் ஜலசந்தியில் கப்பல்களுக்கு டோல்கேட்.. பெரிய திட்டம் -
கண்ட்ரோல் எடுத்த அமித் ஷா.. பவர் போன எடப்பாடி.. இனி டெல்லி தர்பார்.. அதிமுகவின் பிடி நழுவுகிறது? -
என்னது தனித்து போட்டியா? உங்க சீட்டே வேண்டாம்.. விஜய் முடிவால் தெறித்து ஓடும் தவெக நிர்வாகிகள் -
1 மணி ஃப்ளைட்.. இரவே வீடியோ கால்.. தாமரையில் போட்டியிடுங்க.. டிடிவி, அன்புமணிக்கு அமித் ஷா செக்? -
மணிக்கணக்கில் வெயிட்டிங்.. இரவில் எடப்பாடி கே.பழனிசாமியை அதிர வைத்த அமித் ஷாவின் உளவுத்துறை அறிக்கை -
6 + 1 முடிந்த டீல்? திமுக கூட்டணியில் விசிகவுக்கு எத்தனை தொகுதி? திருமாவை சமாதானம் செய்த ஸ்டாலின் -
ஒரு தொகுதிக்கு ஒருவர்.. புஸ்ஸி ஆனந்த் பரிந்துரை கட்டாயம்.. விஜய் செய்யும் புது வகையான நேர்காணல்! -
ஈரானிடம் மண்டியிடும் அமெரிக்கா.. கச்சா எண்ணெய் மீதான தடையை நீக்க முடிவு.. அடிபணிந்த டிரம்ப் -
VCK: 10+1 கேட்டு விசிக விடாபிடி! திருமாவளவன் பிடிவாதத்தின் பின்னணி என்ன? இறங்கி வரும் ஸ்டாலின்? -
அமெரிக்கா.. இந்த ஒற்றைச் சொல்.. இனி உலகத்தை ஆட்டிப்படைக்காது.. வீழும் சாம்ராஜ்ஜியம்.. என்ன நடக்குது? -
அண்ணாமலை + நயினார் + வானதி.. தோல்வி பயத்தில் தொகுதி மாற தயாராகும் பாஜக தலைவர்கள்.. இத்தனை பேரா? -
ஆண்டவரையே திகைக்க வைத்த அறிவாலயம்.. கமல்ஹாசன் எடுத்த கடைசி அஸ்திரம்! மநீம கூட்டத்தில் முக்கிய முடிவு












Click it and Unblock the Notifications