ஆவின் பால் விலை ரூ. 2.50 உயர்வு

பால் கொள்முதல் விலையை உயர்த்த வேண்டும் என்று பால் உற்பத்தியாளர்கள் போராட்டம் நடத்தி வந்தனர். இந் நிலையில் இன்று பால் உற்பத்தியாளர்கள் நலச்சங்கம் மற்றும் தமிழ்நாடு பால் உற்பத்தியாளர்கள் சங்கம் ஆகியவற்றின் நிர்வாகிகளுடன் பால்வளத்துறை அமைச்சர் மதிவாணன்,, மின்சாரத்துறை அமைச்சர் ஆற்காடு வீராசாமி, உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி ஆகியோர் பேச்சுவார்த்தை நடத்தினர்.
இந்தப் பேச்சுவார்த்தையில் கால்நடை பராமரிப்பு மற்றும் பால்வளத்துறை செயலாளர்கள், பால்வளத்துறையின் ஆணையர், ஆவின் நிர்வாக இயக்குனர் ஆகியோரும் கலந்து கொண்டனர்.
இதில் பால் உற்பத்தியாளர்களிடம் இருந்து வாங்கப்படும் பாலின் கொள்முதல் விலையை உயர்த்த முடிவு செய்யப்பட்டது.
இதன்படி பசும்பால் கொள்முதல் விலையை லிட்டருக்கு 2 ரூபாய் உயர்த்தவும், எருமை பால் கொள்முதல் விலையை லிட்டருக்கு 5 ரூபாயும் உயர்த்தப்பட்டுள்ளது.
பசும்பால் தற்போது லிட்டர் 13 ரூபாய் 54 காசு என்ற விலைக்கு கொள்முதல் செய்யப்படுகிறது. இனி இது 15 ரூபாய் 54 காசுக்கு கொள்முதல் செய்யப்படும். அதேபோல எருமை பால் 18 ரூபாய்க்கு கொள்முதல் செய்யப்பட்டு வருகிறது. இனி இது 23 ரூபாய்க்கு கொள்முதல் செய்யப்படும்.
இந்த கொள்முதல் விலை உயர்வு அடுத்த மாதம் 1ம் தேதி முதல் அமலுக்கு வரும்.
பாலை கொள்முதல் செய்யும் விலை உயர்த்தப்படுவதால் பாலின் விற்பனை விலையையும் உயர்த்த முடிவு செய்யப்பட்டுள்ளது. இதனால் ஆவின் மாதாந்திர பால் அட்டையின் விலை உயர்த்தப்படுகிறது.
அட்டைக்கு 15 ரூபாய் 75 காசு என்ற விலைக்கு வழங்கப்பட்ட ஒரு லிட்டர் பால் இனி 17 ரூபாய் 75 காசுக்கு விற்கப்படும். இதன்மூலம் இந்தப் பாலின் விலை லிட்டருக்கு ரூ. 2 உயர்கிறது.
அதே போல சமன்படுத்திய பால் தற்போது லிட்டர் 18 ரூபாய்க்கு விற்கப்படுகிறது. இனி இந்த பால் 20 ரூபாய் 50 காசு என்ற விலைக்கு விற்கப்படும். அதாவது இந்தப் பாலின் விலை லிட்டருக்கு ரூ. 2.50 உயர்கிறது.
இந்த விலை உயர்வும் அடுத்த மாதம் 1ம் தேதி முதல் அமலுக்கு வருகிறது.
-
மகளிர் உரிமைத்தொகை ரூ.3,000.. கல்வி கடன் தள்ளுபடி.. ராமதாஸ் வெளியிட்ட தேர்தல் வாக்குறுதிகள்! -
₹10 லட்சம் லோன் எடுத்தா ஒரு பகுதி இலவசமா? கூட்டுறவு வங்கியில் மானியம்.. பிசினஸ் லாபம் சூப்பர் சான்ஸ் -
சென்னையில் 2 லட்சம் பேருக்கு பறந்த நோட்டீஸ்.. வீடு, கட்டிடம் வைத்துள்ளவர்களுக்கு முக்கிய அறிவிப்பு -
பாதாளத்தில் விழும் தங்கம்.. "ரூ.10,000க்கு கூட போகலாம்.." மெகா இன்ப செய்தியை சொன்ன ஆனந்த் சீனிவாசன் -
சிறகடிக்க ஆசை: போலீஸ் சொன்ன விஷயம்! சந்தோஷத்தில் முத்து! அண்ணாமலை வீட்டில் கொண்டாட்டம்! விஜயா முடிவு -
லால்குடியில் களமிறங்கிய ஆதவ் அர்ஜுனா மாமியார்.. அதிமுகவில் இணைந்த 1 மாதத்தில் சீட் கொடுத்த எடப்பாடி -
ஆபரண தங்கம் 6 சவரன் 15 வருடம் முன் வாங்கினீங்களா? அப்போ ₹1 லட்சம், இப்ப ரேட் தெரிஞ்சா ஷாக் ஆவீங்க -
அண்ணாமலை கடும் ‘அப்செட்’.. தேர்தலில் போட்டியிட மறுப்பது ஏன்? எடப்பாடியால் கலங்கும் பாஜக! 2 மேட்டர் -
தெற்கு ரயில்வேயில் 827 கி. மீ தூரத்திற்கு நடந்த நல்ல விஷயம்.. பயணிகள், பொதுமக்களுக்கு இனி நிம்மதி -
சென்னையில் அதிமுகவுக்காக இறங்கும் 13 பேர்.. 3 பெண்களுக்கு வாய்ப்பு.. கொளத்தூரில் யாருக்கு வாய்ப்பு? -
ரசிகர்கள் எதிர்பார்த்த வீடியோவை வெளியிட்ட திரிஷா.. ஒரு வழியாக எல்லோரும் கேட்டது நடந்துடுச்சு.. குவியும் பாராட்டு -
"பதிலடி தாக்குதல் நடத்துவோம்.." ஈரானுக்கு எதிராக ஒன்றுகூடும் வளைகுடா.. 6 நாடுகள் கூட்டாக அறிக்கை












Click it and Unblock the Notifications