சவப்பெட்டி ஊழல்: காங். மன்னிப்பு கேட்க வேண்டும்-பெர்னாண்டஸ்
டெல்லி: சவப்பெட்டி ஊழல் வழக்கில் தாக்கல் செய்யப்பட்ட குற்றப்பத்திரிகையில் எனது பெயர் இடம்பெறவில்லை. தேவையில்லாமல் என் மீது பழி சுமத்திய காங்கிரஸ் மன்னிப்பு கேட்க வேண்டும் முன்னாள் பாதுகாப்பு துறை அமைச்சர் ஜார்ஜ் பெர்னாண்டஸ் தெரிவித்துள்ளார்.
கடந்த 1999ல் நடந்த கார்கில் போரில் இறந்த ராணுவ வீரர்களின் உடல்களை அடக்கம் செய்ய அமெரிக்காவில் இருந்து சவப்பெட்டி வாங்கப்பட்டது. இதில் ஊழல் நடந்திருப்பதாக கடந்த 2002ல் எதிர்கட்சியாக இருந்த காங்கிரஸ் குற்றம்சாட்டியது. மேலும், அப்போதைய பாதுகாப்பு அமைச்சர் ஜார்ஜ் பெர்னாண்டஸ்க்கு இதில் தொடர்பு உள்ளது என்று குற்றம்சாட்டியது.
இந்நிலையில் இந்த வழக்கை விசாரித்த சிபிஐ கடந்த 19ம் தேதி குற்றப்பத்திரிகையை தாக்கல் செய்தது. அதில் மூன்று ராணுவ அதிகாரிகள் மற்றும் அமெரிக்காவை சேர்ந்த தொழிலதிபர் ஒருவர் என நான்கு பேரை குற்றவாளிகளாக அறிவித்தது. ஆனால், ஜார்ஜ் பெர்னாண்டஸ்க்கும் இந்த வழக்கும் எந்த தொடர்பும் இல்லை என கூறிவிட்டது.
இது குறித்து ஜார்ஜ் பெர்னாண்டஸ் கூறுகையில்,
எனக்கு சிபிஐயின் நற்சான்றிதழ் தேவையில்லை. சவப்பெட்டி ஊழலில் எனக்கு எந்த தொடர்பும் இல்லை. சவப்பெட்டிகள் வாங்கும் விவகாரம் எனது கவனத்துக்கு கொண்டு வரப்படவில்லை. உயிர் தியாகம் செய்த ராணுவ வீரர்களின் ரத்தங்களை குடித்ததாக தவறான குற்றச்சாட்டை தெரிவித்த காங்கிரஸ் என்னிடம் மன்னிப்பு கேட்க வேண்டும் என்றார்.
-
திமுக - காங்கிரஸ்.. யார் அதிக இடங்களில் போட்டி? புதுச்சேரியில் தொடங்கியது பேச்சுவார்த்தை! -
காங்கிரஸ் கட்சியா இது? தேர்தல் அறிவிப்புக்கு முன்பாகவே அசாம் 2ஆம் கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியீடு! -
கூட்டுறவு வங்கி நகைக்கடன் தள்ளுபடி: 5 சவரன் தங்கம் வைத்திருப்பவர்களுக்கு ஜாக்பாட்! எப்படி விண்ணப்பது -
பாஜகவுடன் கூட்டணி வைக்கலாம்.. எழுதிக் கொடுத்த மாவட்டச் செயலாளர்கள்.. நாளை விஜய் எடுக்கும் முடிவு? -
தங்கம் vs ரியல் எஸ்டேட்.. கடைசி காலத்தில் நிம்மதியாக வாழ எது சிறந்தது? ஆனந்த் சீனிவாசன் ஈஸி விளக்கம் -
விரால் மீனின் ஸ்பெஷாலிட்டி இது.. பாம்பு தலையன் மீனுக்குள் அற்புதமான சீக்ரெட்! பெண்களின் வரப்பிரசாதம் -
ஜான் ஆரோக்கியசாமி போட்ட மெகா ஸ்கெட்ச்.. மிரண்டு போன பாஜக மேலிடம்.. B டீம் முத்திரையை உடைப்பாரா விஜய் -
திரிஷா சர்ச்சை அடங்குவதற்குள் மீண்டும் பரபரப்பு… காதல், கள்ளக்காதல் பற்றி பார்த்திபன் ஓபனாக பேச்சு -
அதிமுக எம்பியாக இருந்தபோதே கனிமொழி அக்கா எனக்கு பயிற்சி கொடுத்தார்.. ஓ.பி. ரவீந்திரநாத் -
சிறகடிக்க ஆசை: விஜயாவை பழிதீர்த்த கர்மா.. முத்துவால் ஏற்பட்ட குழப்பம்.. சந்தோஷத்தில் ரோகிணி -
மீண்டும் தள்ளிப்போகும் தேர்தல் தேதி அறிவிப்பு.. பின்னணியில் 3 காரணங்கள்.. தமிழகம் உள்பட 5 மாநில வாக்குப்பதிவு எப்போது? -
தவெகவில் பணக்கஷ்டம்.. ரூ.5 கோடி செலவு செய்ய வேட்பாளர்கள் இல்லை.. கூட்டணி செல்வது தான் சரி.. விஜய்க்கு அழுத்தம்












Click it and Unblock the Notifications