மணல் கடத்தலை தடுத்த பெண் எஸ்.ஐ.க்கு கொலை மிரட்டல்-7 பேர் கைது

Subscribe to Oneindia Tamil

கன்னியாகுமரி: கன்னியாகுமரி மாவட்டம், கொல்லங்கோடு அருகே மணல் கடத்தலை தடுத்த மகளிர் உதவி ஆய்வாளருக்கு கொலை மிரட்டல் விடுத்ததாக 7 பேர் கும்பலை போலீசார் கைது செய்தனர்.

கன்னியாகுமரி மாவட்டம், கொல்லங்கோடு காவல் நிலைய மகளிர் உதவி ஆய்வாளர் பணியாற்றி வருபவர் ஸ்டெல்லா பாய்.

இவர் அதிகாலை நேரத்தில் பாத்திமாநகர் பகுதியில் உள்ள சிறப்பு சோதனைச் சாவடியில் பணியில் இருந்தார். அப்போது அந்த வழியாக வந்த 2 மணல் லாரிகளை நிறுத்தினார்.

லாரிக்கு முன்பு மேக்காடு- பாத்திமாநகர் சாலையில் ஒரு காரில் 7 பேர் வந்தனர். அவர்கள்,லாரியை பறிமுதல் செய்தால், ஸ்டெல்லா பாயை கொலை செய்துவிடுவதாக மிரட்டினர். இது குறித்து ஸ்டெல்லா பாய், உயர் அதிகாரிகளுக்கு தகவல் கொடுத்தார்.

இதையடுத்து கொல்லங்கோடு இன்ஸ்பெக்டர் ஜெயசுப்ரமணியம் தலைமையிலான போலீசார் அங்கு விரைந்தனர். ஸ்டெல்லா பாயுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்ட திக்குறிச்சி செல்வகுமார் (30), தேவதாஸ் (38), ரெஜிலால் (30), ரவிகுமார் (28), பாகோடு டார்வின் ஆன்டனி (29), பாலகிருஷ்ணன் (36), செல்லம் (40) ஆகியோரை கைது செய்தனர்.

மேலும், 2 மணல் லாரிகளும் பறிமுதல் செய்யப்பட்டு காவல் நிலையம் கொண்டு செல்லப்பட்டது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+