ஒரு வழியாய் சொத்து விவரம் வெளியிட முன் வந்த நீதிபதிகள்!
டெல்லி: நீண்ட சர்ச்சைகளுக்குப் பின் உச்ச நீதிமன்ற நீதிபதிகள், தங்களது சொத்து விவரங்களை வெளியிட ஒருவழியாக முன் வந்துள்ளனர்.
இதுதொடர்பாக உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி கே.ஜி.பாலகிருஷ்ணன் தலைமையில் நடந்த நீதிபதிகள் கூட்டத்தில் இந்த முடிவு எடுக்கப்பட்டது.
நீதிபதிகளும் சொத்துக் கணக்கை பகிரங்கமாக அறிவிக்க வேண்டும் என்று கருத்து நாடு முழுவதும் வலுத்து வருகிறது. இது தொடர்பாக தகவல் அறியும் சட்டத்தின் கீழ் ஒருவர் சொத்து விவரம் கேட்டு வழக்குத் தொடர அதற்கு பதிலளிக்க உச்ச நீதிமன்றம் மறுத்தது.
இதையடுத்து மத்திய அரசு ஒரு சட்ட மசோதாவை தயார் செய்தது. கடந்த நாடாளுமன்றக் கூட்டத் தொடரில் இது முன் வைக்கப்பட்டது. அதில், நீதிபதிகள் சொத்துக்கள் குறித்த விவரங்களைத் தாக்கல் செய்யலாம். ஆனால் அவை ரகசியமாகவே வைக்கப்படும், பகிரங்கமாக அறிவிக்கப்பட மாட்டாது என்று இடம் பெற்றிருந்த அம்சத்திற்கு நாடாளுமன்றத்தில் மிகக் கடுமையான எதிர்ப்பை எதிர்க்கட்சிகள் வெளிப்படுத்தின.
இதையடுத்து மசோதாவைத் தாக்கல் செய்த உடனேயே அதைத் திரும்பப் பெற்றுக் கொண்டார் சட்ட அமைச்சர் வீரப்ப மொய்லி.
இந் நிலையில் பஞ்சாப் உயர் நீதிமன்ற நீதிபதி கண்ணன், கர்நாடக உயர் நீதிமன்ற நீதிபதி ஷைலேந்திர குமார் ஆகியோர் தங்களது சொத்து விவரங்களை அடுத்தடுத்து வெளியிட்டு பொறுப்புணர்வை வெளிப்படுத்தினர்.
இதையடுத்து இந்த நீதிபதிகள் சுய விளம்பரத்துக்கு அலைவதாகக் கூறி சர்ச்சையி்ல் சி்க்கினார் உச்ச நீதிமன்றத் தலைமை நீதிபதி பாலகிருஷ்ணன்.
இந்த சம்பவங்களால் நீதித்துறையின் நிலைப்பாடு குறித்து தேசிய அளவில் விவாதங்களும் கேள்விகளும் எழுந்தன. நீதிபதிகளும் மற்ற உயர் பதவிகளில் இருப்பவர்களைப் போன்றே மக்களுக்கு பதிலளிக்கக் கடமைப்பட்டவர்கள் என்று மூத்த அரசியல்சட்ட நிபுணர்கள் கருத்துத் தெரிவித்து வருகின்றனர்.
இதனால் ஏற்பட்ட நெருக்கடியையடுத்து தங்கள் சொத்து விவரங்களை நீதிபதிகள் வெளியிடுவார்கள் என்று தலைமை நீதிபதி அறிவித்துள்ளார்.
சொத்து விவரங்களை உச்ச நீதிமன்ற இணையதளத்தில் நீதிபதிகள் வெளியிடுவர் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
இது குறித்து தலைமை நீதிபதியுடன் மற்ற உயர் நீதிமன்ற நீதிபதிகள் சுமார் 2 மணி நேரத்துக்கும் மேலாக ஆலோசனை நடத்திய பின் சொத்து விவரங்களை தாக்கல் செய்வது என்று தீர்மானம் நிறைவேற்றினர்.
இந்தத் தீர்மானத்தில் அனைத்து நீதிபதிகளும் ஒப்புதல் தெரிவித்து கையெழுத்திட்டால் மட்டுமே அது நடைமுறைக்கு வரும். இதில் ஒரிரு நாட்களில் அனைத்து நீதிபதிகளும் கையெழுத்திட்டுவிடுவர் என்று தெரிகிறது.
-
NDA கூட்டணியில் தவெக? துணை முதல்வராகிறாரா விஜய்? சாணக்கியத்தனத்தை சொல்லி கொடுத்த பிரபல நடிகர் -
“சவுதியிலிருந்து உடனே வெளியேறுங்கள்..” முதல் முறையாக அறிவித்த அமெரிக்கா! ஆக்ரோஷமான ஈரான் -
விஜய்க்கு எதிராக வெளியான வீடியோ.. அதிர்ந்து போன நடிகை அம்பிகா! ஆதங்கத்துடன் பதிலடி -
அமெரிக்கா மீது இடியை இறக்கிய ஈரான்! டிரம்ப் மீது மக்கள் அதிருப்தி! இதுக்கு சும்மாவே இருந்திருக்கலாம் -
திருப்பூரில் இப்படியும் ஒரு புருஷன்.. எந்த கணவனும் செய்யக்கூடாத காரியம்.. ஆடிப்போன மனைவி -
Next CM: தமிழகத்தில் ஆட்சியை பிடிப்பது யார் தெரியுமா? சித்தர் கணிப்பை பாருங்க! அப்போ விஜய்? -
நியூசிலாந்து தொடரால் உடைந்துவிட்டேன்.. கிரிக்கெட் கடவுள் செய்த அட்வைஸ்.. நெகிழும் சஞ்சு சாம்சன்! -
எடப்பாடி கோட்டையில் திமுகவுக்கு ஷாக்! அதிமுகவுக்கு தாவிய முன்னாள் எம்.எல்.ஏ! -
படக்குனு 10 கிராமாவது வாங்கிப் போடுங்க! 19,000 சரிவில் தங்க விலை! அள்ளிப் போட இது தான் சரியான நேரம்! -
90, 60, 55, 25: தமிழகத்தின் அடுத்த முதல்வர் இவர்தான்? 2 துணை முதல்வர்கள் யார்? பலே பாஜக.. அப்ப விஜய் -
செவ்வாழை ரகசியம்: 48 நாட்கள் தொடர்ந்து பழத்தை சாப்பிட்டால் உடலில் நடக்கும் அந்த அதிசயம்..! -
வாடகை வீடுகளில் வசிக்கிறீங்களா? வந்தது 'பம்பர்' பரிசு.. மத்திய அரசின் புது வாடகை விதி! நோட் பண்ணுங்க












Click it and Unblock the Notifications