விநாயகர் சதுர்த்தி-தாக்குதலுக்கு லஷ்கர் திட்டம்
டெல்லி: மகாராஷ்டிர மாநிலத்தில் விநாயகர் சதுர்த்தி விழாவின்போது தாக்குதல் நடத்த லஷ்கர்-ஏ-தொய்பா அமைப்பு திட்டமிட்டிருப்பது தெரியவந்துள்ளது. இதையடுத்து பாதுகாப்பு ஏற்பாடுகள் பலப்படுத்தப்பட்டுள்ளன.
டெல்லி ரயில் நிலையத்தில் கடந்த செவ்வாய்க்கிழமை பிடிபட்ட லஷ்கர் தீவிரவாதி யூசுப் என்பவரிடம் போலீஸார் விசாரணை நடத்தியபோது இந்த சதித் திட்டம் குறித்த விவரம் தெரியவந்தது.
டெல்லியிலிருந்து மகாராஷ்டிர மாநிலம் நான்டெட் நகருக்குச் செல்ல ரயில் ஏற காத்திருந்தபோது யூசுப் பிடிபட்டார். அவரிடமிருந்து ஏராளமான வெடிப்பொருள்களும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.
மேலும் பாகிஸ்தான் பாஸ்போர்ட் உள்ளிட்ட சில ஆவணங்களும் பறிமுதல் செய்யப்பட்டன.
பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் பகுதிக்கு அவர் பலமுறை சென்று வந்துள்ளதும் விசாரணையில் தெரியவந்துள்ளது.
வெடிகுண்டு தாக்குதல் நடத்த அவர் அனுப்பி வைக்கப்பட்டாரா அல்லது வெடிப்பொருள்களை யாரிடமாவது கொடுக்க அனுப்பி வைக்கப்பட்டாரா என்று விசாரணை நடக்கிறது. நான்டெட் நகரிலும் விசாரணை நடந்து வருகிறது.
இந்தத் தகவலையடுத்து மகாராஷ்டிரா முழுவதும் விநாயகர் சதுர்த்தி கொண்டாட்டங்களுக்கு உயர் மட்ட பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications