சமூக நலத்துறையில் லஞ்சம்-3 பேர் சிக்கினர்
தூத்துக்குடி: தூத்துக்குடி மாவட்ட சமூக நலத்துறை அலுவலகத்தில் லஞ்ச ஓழிப்பு துறை அதிகாரிகள் நடத்திய திடீர் சோதனையில் கணக்கில் வராத ரூ.29 ஆயிரம் பறிமுதல் செய்யப்பட்டது. மூன்று பேர் மீது வழக்கு தொடரப்பட்டுள்ளது.
தூத்துக்குடி மாவட்ட சமூக நலத்துறை அலுவலகம் டூவிபுரத்தில் உள்ளது. சமீபத்தில் ஆழ்வார்திருநகரி பகுதிகளில் இருந்துமூவாலூர் ராமமிர்தம் அம்மையார் திருமண உதவி திட்டம், இரண்டு பெண் குழந்தைகள் கொண்ட குடும்பத்துக்கு அரசு உதவித் தொகை போன்றவற்றுக்கு விண்ணப்பித்தவர்கள் இங்கு வந்து அதை பெற்றுக் கொள்ளலாம் என தகவல் தெரிவிக்கப்பட்டது.
இதனையடுத்து ஆழ்வார்திருநகரி, தென்பொறை, குலசேகரம்பட்டிணம் பகுதியில் இருந்து 100க்கும் மேற்பட்டவர்கள் வேன்களில் வந்தனர்.
அவர்களிடம் சமூக நலத்துறை அலுவலகத்தில் இருந்து ஆழ்வார்திருநகரி ஒன்றிய ஊர்நல அலுவலர்கள் புஷ்பா, பாப்பாத்தி, மற்றும் அலுவலக உதவியாளர் சுடலைமணி ஆகியோர் அவர்களிடம் நலத்திட்ட உதவித் தொகைக்கான செக் விரைவில் வழங்கப்படும். இதற்காக அதிகாரிகளுக்கு கொடுப்பதற்காக ரூ.500 தர வேண்டும் என்று கூறியுள்ளார்.
இதையடுத்து பயனாளிகள் 70 பேர் தலா ரூ. 500 கொடுத்துள்ளனர். மேலும் அவர்களை வேன்களில் அழைத்து வருவதற்காக தலா ரூ.60 வசூலித்துள்ளனர்.
இதுகுறித்து ரகசிய தகவலறிந்த தூத்துக்குடி லஞ்ச ஒழிப்பு துறை டிஎஸ்பி தங்கசாமி, இன்ஸ்பெக்டர்கள் எடிசன், ராஜ் ஆகியோர் தலைமையில் அதிரடி சோதனை மேற்கொண்டனர். இதில் புஷ்பா, பாப்பாத்தி மற்றும் சுடலைமணி ஆகியோரிடம் இருந்து கணக்கில் வராத ரூ.29 ஆயிரத்து 350 பறிமுதல் செய்தனர். அவர்கள் மூவர் மீதும் வழக்கு பதிவு செய்து்ள்ளனர்.