For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

அவிநாசி அருகே கார் - பஸ் மோதல் விபத்து: நைஜீரிய வாலிபர் பலி

By Staff
Google Oneindia Tamil News

அவிநாசி: அவிநாசி அருகே பஸ் ஸ்டாப்பில் நின்ற பஸ் மீது கார் மோதியதில், நைஜீரிய நாட்டைச் சேர்ந்த வாலிபர் பலியானார்.

நைஜீரியா நாட்டைச் சேர்ந்த கிரேக்மோர் (30), டிராடோ, ஓபினோ ஆகிய மூவரும், கோவையிலிருந்து தொழில் விஷயமாக திருப்பூருக்கு காரில் சென்று கொண்டிருந்தனர்.

தெக்கலூர் அருகே கார் சென்று கொண்டிருந்த போது, பஸ் ஸ்டாப்பில் நின்ற பஸ் மீது கார் மோதியது. இந்த விபத்தில், காரில் பயணம் செய்த மூவரும் பலத்த காயமடைந்தனர்.

இவர்களை கோவையிலுள்ள ஒரு தனியார் மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு செல்லப்பட்டனர். இதில், வழியிலேயே கிரேக்மோர் பரிதாமாக இறந்தார். மற்ற இருவரும் தனியார் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இந்த விபத்து குறித்து அவிநாசி இன்ஸ்பெக்டர் தெய்வேந்திரன் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X