இரட்டை கொலை வழக்கு: கிராமத்தினர் ஓடவில்லை-ஏடிஜிபி அர்ச்சனா
சென்னை: சென்னை இரட்டை கொலை வழக்கில் பனையூர் கிராமத்தை சேர்ந்த 50 பேருக்கு சம்மன் அனுப்பட்டதாகவும், அதனால் கிராம மக்கள் ஓட்டம் எடுத்ததாகவும் ஒரு பத்திரிகை செய்தி வெளியிட்டுள்ளது. அது தவறான செய்தி என சிபிசிஐடி கூடுதல் டிஜிபி அர்ச்சனா ராமசுந்தரம் தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கை,
நீலாங்கரை அடுத்த பனையூரில் நடந்த இரட்டை கொலை வழக்கு தொடர்பாக சிபிசிஐடி போலீசார் சிறப்பாக விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
சமீபத்தில் ஒரு பத்திரிகை ஒன்று பனையூர் கிராமத்தை சேர்ந்த 50 பேருக்கு போலீசார் சம்மன் அனுப்பியதாகவும், இதனால் கிராம மக்கள் ஓட்டம் பிடித்ததாகவும் செய்திகள் வெளியிட்டுள்ளது. இது முற்றிலும் தவறான செய்தி.
இந்த வழக்கில் கொலை செய்யப்பட்ட இளங்கோவனின் மருமகள் வசந்தி, அவரது குழந்தைகளிடம் நடந்த விசாரணையில் சண்முகராஜன் மட்டுமே இந்த வழக்கில் சம்பந்தப்பட்டவர்கள் என்பது தெரியவந்துள்ளது.
சண்முகராஜன் மீது ஏற்கனவே பல்வேறு வழக்குகள் உள்ளது. கொலை அன்று அவர் பயன்படுத்திய ஹுண்டாய் கார் திருடப்பட்டு பயன்படுத்தப்பட்ட கார். ஏற்கனவே நீலாங்கரை காவல் நிலைய எல்லையில் ராஜாமுகமது என்பவர் கடந்த 24.6.08 அன்று இந்த கார் காணாமல் போனதாக புகார் கொடுத்துள்ளார்.
சில பத்திரிகைகள் வெளியிடும் பரபரப்பூட்டும் செய்திகள் வழக்கு விசாரணையில் பாதிப்பு ஏற்படுத்தக்கூடும் என்பதால் அதைத் தவிர்க்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது என அந்த அறிக்கையில் அர்ச்சனா ராமசுந்தரம் தெரிவித்துள்ளார்.
-
தங்கம் விலை இன்னும் 30 சதவீதம் சரிய போகுது.. இன்ப அதிர்ச்சி தந்த நகை வியாபாரிகள் சங்க தலைவர் -
Chennai Encounter: சென்னை மாதவரத்தில் ரவுடி தொப்பை கணேஷ் போலீஸாரால் சுட்டுக் கொலை -
சென்னையில் கண்டக்டர் இல்லாத தங்கரதம் அரசு பஸ்.. ஓஎம்ஆர் ரூட்டின் வரப்பிரசாதம்.. டிக்கெட் விலை ஹேப்பி -
தண்ணீர் பாட்டில் 35, டிபன் 50, சென்னை வேட்பாளர்கள் எந்தெந்த பொருட்களுக்கு எவ்வளவு செலவு செய்யலாம் -
என்னது துணை முதலமைச்சர் பதவி தராங்களா.. விஜய் தான் முதலமைச்சர்.. செங்கோட்டையன் தடாலடி -
சல்லி சல்லியாக நொறுங்கிடுச்சே.. துபாய் அஸ்திவாரமே ஆடுதுங்க.. 'சொர்க்க பூமி' இப்படி ஆகிடுச்சே! -
விஜய் ஏமாத்திட்டாரு.. பருத்தி மூட்டை குடோனிலேயே இருந்திருக்கலாம்.. திமுகவில் இணையும் செங்கோட்டையன்? -
விஜய் வந்தால்! அதிமுக 134 தொகுதிகளில் மட்டுமே போட்டியிடும்? எடப்பாடி பழனிசாமியின் சீட் கணக்கு! -
இப்போ வேண்டாம்.. தேர்தலுக்கு பின் ஆதரவு தருகிறேன்.. சிஎம் போஸ்ட் தாங்க.. பாஜகவிடம் பேசிய விஜய்? -
திருவள்ளூர் மக்கள் ஏக்கத்துடன் பார்த்த பல ஆண்டு கனவு... ரயில் நிலையத்தில் பார்த்துமே பெரு மகிழ்ச்சி -
"இது" இல்லை என்றால் சிலிண்டர் வராது! புக்கிங் விதிகளை திடீரென மாற்றிய மத்திய அரசு! முக்கிய அறிவிப்பு -
வேலைக்கு ஆகாத டிரம்ப் பிளான்! அமெரிக்காவின் தலைமையை ஏற்க தயங்கும் உலக நாடுகள்! ஈரான் வெற்றி!












Click it and Unblock the Notifications