For Daily Alerts
Just In
பள்ளி வேன் கவிழ்ந்து 20 மாணவர்கள் படுகாயம்
கள்ளக்குறிச்சி: கள்ளக்குறிச்சி அருகே தனியார் பள்ளி வேன் ஒன்று விபத்துக்குள்ளானதில் அதில் பயணம் செய்த 20 மாணவர்கள் படுகாயம் அடைந்தனர்.
கள்ளக்குறிச்சி அருகே ஒரு தனியார் பள்ளியில் பயிலும் மாணவர்கள் பள்ளி முடிந்து வேனில் வீடு திரும்பிக் கொண்டிருந்தனர்.
அப்போது, இந்த வேன் திடீரென விபத்தில் சிக்கியது. இதில் வேனில் பயணம் செய்த படுகாயம் அடைந்தனர். அவர்களை கள்ளக்குறிச்சி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
பள்ளி வேன் விபத்துக்குள்ளான விஷயம் அறிந்த போலீசார் சம்பவ இத்திற்கு விரைந்துள்ளனர். மேலும், இந்த விபத்து குறித்து தகவல் அறிந்த பள்ளி ஆசிரியர்கள், நிர்வாகிகள், மாணவர்களின் பெற்றோர்கள் கள்ளக்குறிச்சி அரசு மருத்துவமனையை சூழ்ந்துள்ளனர்.
இந்த விபத்திற்கான காரணம் என்ன என்று போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
Comments
மாணவர்கள் விபத்து படுகாயம் injured kallakurichi கள்ளக்குறிச்சி van வேன் private school தனியார் பள்ளி
Story first published: Tuesday, September 1, 2009, 17:48 [IST]