இமாச்சலில் பஸ் பள்ளத்தில் விழுந்து 17 பேர் பலி

Subscribe to Oneindia Tamil

சுரேந்திர நகர் (இ.பி.): இமாச்சலப் பிரதேச மாநிலம் சுரேந்தர் நகர் என்ற இடத்திற்கு அருகே நடந்த பயங்கர விபத்தில் 17 பஸ் பயணிகள் உயிரிழந்தனர். 24 பேர் படுகாயமடைந்தனர்.

மண்டி மாவட்டம் சுரேந்திரநகர் அருகே மலைப் பகுதியில் வந்து கொண்டிருந்த தனியார் பேருந்து திடீரென நிலை தடுமாறி 100 அடிப் பள்ளத்தில் விழுந்தது. இதில் 17 பயணிகள் உயிரிழந்தனர். ஆனால் உயிர்ப்பலி 20க்கும் மேல் இருக்கும் என அஞ்சப்படுகிறது. 24 பேர் காயமடைந்த நிலையில் மீட்கப்பட்டுள்ளனர்.

இதுவரை 17 உடல்களை அதிகாரிகள் மீட்டுள்ளனர். மேலும் பலரைக் காணவில்லை. அவர்களும் இறந்திருக்கலாம் என அஞ்சப்படுகிறது.

விபத்தில் சிக்கிய பேருந்து பிலாஸ்பூரிலிருந்து சுரேந்திர நகர் நோக்கி வந்து கொண்டிருந்தது. பாவனா என்ற இடத்தில் வந்த போது விபத்து ஏற்பட்டது.

பேருந்தில் 50க்கும் மேற்பட்ட பயணிகள் இருந்ததாக தெரிகிறது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+