For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

ஈழத் தமிழர் படுகொலையில் கருணாநிதி முதல் குற்றவாளி - நெடுமாறன்

By Staff
Google Oneindia Tamil News

Neduamaran
பரமக்குடி: ஈழத் தமிழர் படுகொலையில், சர்வதேச அரங்கில் தமிழக முதல்வர் கருணாநிதி தான் முதல் குற்றவாளி, இரண்டாவது குற்றவாளி பிரதமர் மன்மோகன் சிங், மூன்றாவது குற்றவாளி இலங்கை அதிபர் ராஜபக்சே என்று இலங்கைத் தமிழர் பாதுகாப்பு இயக்க ஒருங்கிணைப்பாளர் பழ.நெடுமாறன் கடுமையாக விமர்சித்துள்ளார்.

இலங்கைத் தமிழர் பாதுகாப்பு இயக்கம் சார்பில், பரமக்குடியில் பொதுக் கூட்டம் நடைபெற்றது.

இந்த கூட்டத்தில் இலங்கைத் தமிழர் பாதுகாப்பு இயக்க ஒருங்கிணைப்பாளர் பழ.நெடுமாறன் கலந்து கொண்டு பேசியதாவது...

இலங்கை அரசு, மன்னார் வளைகுடா படுகையில் உள்ள பெட்ரோல் எடுக்கும் உரிமையை சீனாவிடம் கொடுத்துள்ளது. இந்திய தென் பகுதியில் இந்தியாவுக்கு பாதுகாப்பு கேடயமாக இருந்த இலங்கை தற்போது மாறிவிட்டது. இப்போது அது சீனாவுக்கு ராணுவத் தொழிற்சாலை அமைக்க அனுமதி அளித்து விட்டது. இது இந்தியாவுக்கு ஆபத்தை உண்டாக்கும் .

பிரபாகரன் பற்றி பலவிதமான செய்திகள் பரப்பப்படு வருகின்றது. ஆனால் பிரபாகரன் உடல் நலத்துடன் நன்றாக உள்ளார்.

உலக அளவில் வாழும் 9 கோடி தமிழர்களும் ஒன்றுகூடி மீண்டும் விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரன் தலைமையில் முன்னெடுத்து போரிடுகின்ற வாய்ப்பை உருவாக்க வேண்டும்.

ஈழத் தமிழர் படுகொலையில், சர்வதேச அரங்கில் தமிழக முதல்வர் கருணாநிதி தான் முதல் குற்றவாளி, இரண்டாவது குற்றவாளி பிரதமர் மன்மோகன் சிங், மூன்றாவது குற்றவாளி இலங்கை அதிபர் ராஜபக்ச.

இவர்களை சர்வதேச நீதிமன்றத்தில் குற்றவாளிகளாக நிறுத்தி நிரூபிக்காமல் விடமாட்டோம் என்றார்.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X