தமிழகத்தின் முதல் பெண் டிஜிபி ஆனார் லத்திகா சரண்

இது குறித்து தமிழக உள்துறை செயலாளர் எஸ்.மாலதி வெளியிட்டுள்ள உத்தரவில்,
மாநில நிர்வாக பிரிவு கூடுதல் டிஜிபி லத்திகா சரணுக்கு டிஜிபியாக பதவி உயர்வு அளிக்கப்பட்டுள்ளது. அவர் பயிற்சி டிஜிபியாக நியமிக்கப்பட்டுள்ளார். இதையடுத்து அவர் தமிழகத்தின் முதல் பெண் டிஜிபி என்ற பெருமை பெற்றுள்ளார்.
அதேபோல் மாநில தலைமையக கூடுதல் டிஜிபி போலோநாத்தும் டிஜிபியாக பதவி உயர்வு பெற்றுள்ளார். இவர் தமிழ்நாடு சீருடை பணியாளர் தேர்வாணைய தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார். அந்த பதவியில் இருந்த டிஜிபி என்.பாலச்சந்திரன் தமிழ்நாடு போலீஸ் வீட்டுவசதி வாரிய தலைவராக மாற்றப்பட்டுள்ளார்.
மாநில குற்றப்பிரிவு கூடுதல் டிஜிபி ஆர்.சேகர் மாநில நிர்வாகப்பிரிவு கூடுதல் டிஜிபியாக நியமிக்கப்பட்டுள்ளார். அவரது இடம் சிபிசிஐடி கூடுதல் டிஜிபி அர்ச்சனா ராமசுந்தரத்திடம் கூடுதல் பொறுப்பாக ஒப்படைக்கப்பட்டுள்ளது.
வடக்கு மண்டல ஐஜி ஆர்சி குடவாலா மாநில குற்றப்பிரிவு விசேஷ புலனாய்வு பிரிவு ஐஜியாக மாற்றப்பட்டுள்ளார். மாநில நிர்வாக பிரிவு ஐஜி ஆசிஷ் பெங்ரா வடக்கு மண்டல ஐஜியாக பொறுப்பு ஏற்பார்.
5 உதவி சூப்பிரண்ட்கள் மாற்றம்...
உதவி போலீஸ் சூப்பிரண்ட் சரவணன், அறந்தாங்கிக்கும், சேவியர் தனராஜ், செங்கல்பட்டு சப் டிவிசனுக்கும், அனில்குமார் கிரி, தூத்துக்குடிக்கும், பிரவேஷ்குமார், பரமக்குடி சப் டிவிசனுக்கும், காளிராஜ் மகேஷ்குமார், தஞ்சாவூர் சப் டிவிசனுக்கும் உதவி சூப்பிரண்டாக நியமிக்கப்பட்டுள்ளனர் என அந்த உத்தரவில் கூறப்பட்டுள்ளது.
-
Mayor Priya: சென்னை மேயர் பிரியாவுக்கு உடல்நலக் குறைவு! காலில் என்ன ஆனது? -
விஜய் எடுக்கும் ரிஸ்க்.. பரந்தூர் விமான நிலையத்தால் பல விஷயங்களை இழக்க வேண்டியிருக்கும்! -
சென்னையில் மாறிய ரூல்ஸ். அடுக்குமாடி வீடுகள், வணிக நிறுவனங்கள், ஓட்டல்களுக்கு மாநகராட்சி அதிரடி -
தமிழ்நாடே குளுகுளுவென மாறப்போகிறது.. 11 மாவட்டங்களில் இன்று கனமழை.. எந்தெந்த மாவட்டம்? -
தமிழகத்திற்கு நிரந்தர டிஜிபி.. யுபிஎஸ்சி பரிந்துரைக்கு ராமதாஸ் வரவேற்பு.. விஜய்க்கு வைத்த கோரிக்கை -
டெல்லியிலும் கொங்கு சமையல் மணக்கப்போகுது.. முதல்வர் விஜய்க்கு சமைக்கும் மாதம்பட்டி ரங்கராஜ்! -
உதயநிதி வீட்டை கேட்கும் ஆதவ் அர்ஜுனா.. இந்த வீடுதான் வேண்டும்.. கோட்டையில் நீடிக்கும் மல்லுக்கட்டு -
சீமான் வீட்டு விசேஷத்தில் தாய்மாமன் சீருடன் அனிதா ராதாகிருஷ்ணன்! வாசல் வரை வரவேற்று.. என்ன ஒரு பாசம் -
எடப்பாடி அனுப்பிய மெசேஜ்.. சி.வி. சண்முகம் வீட்டில் உறுதிபடுத்திய கே.சி வீரமணி.. இணைகிறது அதிமுக -
நாளுக்கு நாள் மோசமாகும் இந்தியா.. குட்டி குட்டி நாடெல்லாம் நம்மை முந்திக்கொண்டு செல்கிறது! -
விஜய் நியமித்த 2 நாளில்.. IPS அருணை கோர்ட்டிலேயே காத்திருக்க சொன்ன நீதிபதி சுவாமிநாதன்.. ஏன்? -
420 யூனிட் ஓடியிருக்கிறது.. ஆனால் 200 யூனிட் கழிக்காமல் 100 யூனிட் கழித்தது ஏன்? விளக்கம்












Click it and Unblock the Notifications