ரயில் மறியில்-வீரமணி உட்பட 550 பேர் கைது
சென்னை: இலங்கையில் முள்வேலி முகாம்களில் சிக்கி தவிக்கும் தமிழர்களை காப்பாற்ற கோரி இன்று தடையை மீறி ரயில் மறியல் செய்ய முயன்ற திராவிட கழகத்தினர் சுமார் 550 பேர் கைது செய்யப்பட்டனர்.
இலங்கை தமிழர்களை காக்க வேண்டும் என்ற நோக்கத்தில் திராவிட கழக தலைவர் வீரமணி இன்று ரயில் மறியலுக்கு அழைப்பு விடுத்திருந்தார். இதையடுத்து எழும்பூர் ரயில் நிலையத்தில் பலத்த பாதுகாப்புக்கு ஏற்பாடு செய்யப்பட்டது.
இந்நிலையில் இன்று சுமார் 550க்கும் மேற்பட்ட திராவிட கழக தொண்டர்கள் பெரியார் திடலில் ரயில் மறியலுக்கு திரண்டனர். இதையடுத்து போலீசார் அவர்களை கைது செய்தனர்.
அதற்கு முன்னதாக திராவிட கழக தலைவர் வீரமணி தொண்டர்களிடம் பேசுகையில்,
இலங்கை தமிழர்களுக்காக கருணாநிதியுடன் அனைவரும் இணைந்து போராட வேண்டும் என கேட்டு கொள்கிறேன். இந்த விஷயத்தில் அவருடன் யாரும் பகைமை பாராட்ட வேண்டாம். அவர் இலங்கை தமிழர்களுக்காக இரண்டு முறை ஆட்சியை இழந்தவர்.
ராஜபக்சே பதவிக்கு வந்த போது தான் தமிழர்களுக்கு எதிரி அல்ல என கூறினார். ஆனால், தற்போது தமிழர்களை வாழ முடியாமல் அவர் செய்துவிட்டார்.
அங்கு மனித உரிமை மீறப்படுவதாக அமெரிக்கா, நார்வே உள்ளிட்ட நாடுகள் இலங்கைக்கு கண்டனம் தெரிவித்துள்ளன. ஆனால், இந்தியா இன்னும் அமைதியாகவே இருக்கிறது.
வன்னி பகுதிகளில் வன் கொடுமை முகாம்களில் இருக்கும் தமிழர்களை உடனடியாக விடுதலை செய்ய வேண்டும் என வேண்டுகிறோம்.
இந்த கோரிக்கை நிறைவேறாவிட்டால் முதல்வர் தலைமையில் போராட்டம் நடைபெறும் என்பதை தெரிவித்து கொள்கிறேன் என்றார்.
-
Gold Price Fall: ஈரான் போருக்கு மத்தியில்! தங்கம் விலை குறைய 5 முக்கிய காரணங்கள் என்னென்ன தெரியுமா? -
சல்லி சல்லியாக நொறுங்கிடுச்சே.. துபாய் அஸ்திவாரமே ஆடுதுங்க.. 'சொர்க்க பூமி' இப்படி ஆகிடுச்சே! -
எனக்கு நயன்தாரா வேணும்.. ஸ்டாலின் கனவை நிறைவேற்றுவாரா சி.வி சண்முகம் சர்ச்சை பேச்சு -
திருவள்ளூர் மக்கள் ஏக்கத்துடன் பார்த்த பல ஆண்டு கனவு... ரயில் நிலையத்தில் பார்த்துமே பெரு மகிழ்ச்சி -
தவெக அருண்ராஜ் படத்துடன்.. வாக்காளர்களுக்கு விநியோகம் செய்ய இருந்த சில்வர் பாத்திரங்கள் பறிமுதல்! -
என்னது துணை முதலமைச்சர் பதவி தராங்களா.. விஜய் தான் முதலமைச்சர்.. செங்கோட்டையன் தடாலடி -
அமெரிக்க கடற்படை உலகிலேயே மிகவும் சக்தி வாய்ந்தது.. ஏன் ஹார்முஸ் ஜலசந்தியை பாதுகாக்க முடியவில்லை? -
கொட்டிய ஆலங்கட்டி மழை.. கோவை, ஈரோடு, திருப்பூர் மாவட்டங்களில் ஐஸ் மழை பெய்ததால் மக்கள் மகிழ்ச்சி! -
"இது" இல்லை என்றால் சிலிண்டர் வராது! புக்கிங் விதிகளை திடீரென மாற்றிய மத்திய அரசு! முக்கிய அறிவிப்பு -
இப்போ வேண்டாம்.. தேர்தலுக்கு பின் ஆதரவு தருகிறேன்.. சிஎம் போஸ்ட் தாங்க.. பாஜகவிடம் பேசிய விஜய்? -
தங்க மழை கொட்ட போகுது.. PF வச்சு இருக்கீங்களா? சம்பள உச்சவரம்பு ₹25,000 ஆக உயருது? மாஸ் பிளான் -
வடிவேலுவை சினிமாவில் நுழைய விட்டதும், வளர்த்து விட்டதும் தப்பு.. ப்ளூ சட்டை மாறன் காட்டம்! பின்னணி சம்பவம்












Click it and Unblock the Notifications