யுஎஸ்-தந்தையை சுட்டு கொன்ற 10 வயது மகன்

Subscribe to Oneindia Tamil

பெலன்: அமெரிக்காவில் தன்னை துன்புறுத்திய தந்தையை 10 வயது மகன் ஒருவன் துப்பாக்கியால் சுட்டு கொன்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

அமெரிக்காவின் நியூ மெக்சிகோ மாகாணத்தில் பெலன் நகர் உள்ளது. இந்த நகரில் வசித்து வந்தவர் பைரோன் ஹில்பர்ன்(42). சமீபத்தில் இவரது 10 வயது மகன் போலீசுக்கு போன் செய்துள்ளான்.

இதையடுத்து அவனது வீட்டுக்கு வந்த போலீஸ் அதிர்ச்சியடைந்தனர். அங்கு அவனது தந்தை தலையில் குண்டு பாய்ந்து மரணமடைந்து கிடந்தார்.

அப்போது போலீசாரிடம் அந்த சிறுவன் கூறுகையில்,

நான் எனது துப்பாக்கியை வைத்து தந்தையை சுட்டு கொன்றேன். அவர் என்னை அதிகம் துன்புறுத்தியதாக நினைத்தால் இதை செய்தேன் என்றார்.

இந்த சம்பவத்தை அந்த சிறுவனின் 6 வயது தங்கை நேரில் பார்த்ததாக போலீசார் தெரிவித்துள்ளனர். அந்த சிறுவன், நியூமெக்சிகோ மாகாண சிறுவர் சீர்திருந்த மையத்தில் அடைக்கப்பட்டான்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+