ராகுல் காந்தி 8ம் தேதி தமிழகம் வருகிறார் - தங்கபாலு

ஒவ்வொரு மாநிலமாக காங்கிரஸ் கட்சியை வலுப்படுத்தும் வேலையில் இறங்கியுள்ளார் ராகுல் காந்தி. அவரது அயராத முயற்சியால், உ.பி. மாநிலத்தில் அடிமட்டத்தில் கிடந்த காங்கிரஸ் இன்று நல்ல வலுவை எட்டியுள்ளது.
இந்த நிலையில் தற்போது தமிழகத்திலும் காங்கிரஸ் கட்சியை தூக்கி நிறுத்தும் முயற்சியில் இறங்கியுள்ளார் ராகுல் காந்தி.
அதற்கு முன்னோட்டமாக இளைஞர் காங்கிரஸை புதுப்பிக்கும் பணியை தொடங்கியுள்ளது தமிழக காங்கிரஸ். தற்போது இளைஞர் காங்கிரஸுக்கு புதிய உறுப்பினர் சேர்க்கை தொடங்கி நடந்து வருகிறது.
இந்த நிலையில், உறுப்பினர் சேர்க்கையை தீவிரப்படுத்தவும், கட்சி இளைஞர்களுடன் உரையாடவும் ராகுல் காந்தி திட்டமிட்டு உள்ளார்.
இதற்காக அவர் தமிழகம் வருகிறார். வருகிற 8ம் தேதி கன்னியாகுமரிக்கு முதலில் வருகிறார் ராகுல். பின்னர் மதுரை, கோவை, சேலம் உள்ளிட்ட நகரங்களுக்கும் செல்கிறார்.
10ம் தேதி வரை 3 நாட்களுக்கு தமிழகத்தில் சுற்றுப்பயணம் செய்கிறார் ராகுல் காந்தி.
இத்தகவலை தமிழக காங்கிரஸ் தலைவர் தங்கபாலு தெரிவித்துள்ளார்.
ராகுல் காந்தியின் வருகையைத் தொடர்ந்து தமிழக காங்கிரஸ் கட்சியினர் உற்சாகமடைந்துள்ளனர்.












Click it and Unblock the Notifications