அரசு விழாவில் தகராறு செய்த அதிமுக-இருவர் கைது
புதுச்சேரி: புதுச்சேரி மாநில அரசு விழாவில் தகராறு செய்த வழக்கில் போலீசார் அதிமுகவினர் இருவரை கைது செய்தனர். மேலும் 5 பேர் முன் ஜாமீன் கோரி நீதி மன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளனர்.
நெல்லித்தோப்பு வேல்முருகன் நகரில் மத்திய அமைச்சர் நாராயணசாமி தலைமையில் சாலைப் பணிக்கான பூமி பூஜை நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியின் போது அதிமுகவினருக்கும், திமுகவினருக்கும் இடையில் மோதல் ஏற்பட்டது.
இது தொடர்பாக நகராட்சி உதவிப் பொறியாளர் கரிபிரான் உருளையன்பேட்டை காவல் நிலையத்தில் புகார் செய்தார். அதிமுக எம்.எல்.ஏ ஓம்சக்தி சேகர் உள்ளிட்டோர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டது. அறிவழகன், டிங்கர் மூர்த்தி ஆகியோரை போலீசார் கைது செய்தனர்.
இந்த வழக்கு தொடர்பாக கணேசன், அன்பழகன் உள்ளிட்ட அதிமுகவினர் 5 பேர் புதுச்சேரி முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் முன்ஜாமீன் கோரி மனு தாக்கல் செய்தனர்.
இந்த மனு தலைமை நீதிபதி கிருஷ்ணராஜ் முன்னிலையில் விசாரணைக்கு வந்தது. அதை நீதிபதி 7ம் தேதிக்கு ஒத்திவைத்தார்.












Click it and Unblock the Notifications