திராவிடர் விழிப்புணர்வு கழக தலைவரின் தம்பி உள்பட 20 பேர் கைது
திண்டுக்கல்: திண்டுக்கல் மாவட்டம் தாடிக்கொம்பு அருகேயுள்ள காமாட்சிபுரத்தில் திராவிடர் விழிப்புணர்வு கழக தலைவர் அரசகுமாரின் தம்பி ரவி உள்பட 20 பேரை போலீசார் கைது செய்தனர்.
திண்டுக்கல் மாவட்டம் தாடிக்கொம்பு அருகேயுள்ள காமாட்சிபுரத்தில் திராவிடர் விழிப்புணர்வு கழக தலைவர் அரசகுமாரின் தம்பி ரவி, கேவிகே கல்வியியல் கல்லூரியை நடத்தி வந்தார்.
இந்த இடத்தை திண்டுக்கல்லை சேர்ந்த சுப்புராஜ் என்பவருக்கு ரூ. 75 லட்சத்துக்கு கடந்த ஆறு மாதத்துக்கு முன்பு விற்றார். இதற்கு ரூ. 25 லட்சத்தை முன் தொகையாக பெற்றுக் கொண்டார்.
இந்த நிலையில், கல்லூரி இடத்தை சுப்புராஜ்க்கு பேசியபடி ரவி தர மறுத்ததால், அவர் அந்த இடத்தை தனது ஆதரவாளர்களுடன் சென்று ஆக்கிரமிக்க முயன்றார்.
இதனையடுத்து, திராவிடர் விழிப்புணர்வுகழக மாணவரணி தலைவர் பிடி ரவி (36), மாவட்ட செயலாளர் கருணாகர பாண்டியன் (50) மற்றும் சுரேஷ்(34) உள்பட சுமார் 20 பேர் அரிவாள், கம்பு போன்ற ஆயுதங்களுடன் சென்று அவர்களை தாக்க முயன்றனர்.
இந்த தகவலை கேள்விப்பட்ட போலீசார் தாக்குதலில் ஈடுபட முயன்ற 20 பேரையும் கைது செய்தனர். மேலும், அவர்கள் வந்த மூன்று கார்களையும் பறிமுதல் செய்தனர்,












Click it and Unblock the Notifications