For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

மெல்போர்னில் தீபாவளி கொண்டாட்டம்-ஆஸி. அரசு முடிவு

By Staff
Google Oneindia Tamil News

Fireworks
மெல்போர்ன்: இந்திய மாணவர்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்ட சம்பவங்கள் காரணமாக ஏற்பட்டுள்ள கசப்புணர்வை போக்க ஆஸ்திரேலிய அரசு அந்நாட்டில் தீபாவளி பண்டிகையை விமர்சிகையாக கொண்டாட முடிவு செய்துள்ளது.

சமீபகாலமாக ஆஸ்திரேலியாவில் படித்து வரும் இந்திய மாணவர்கள் கடும் தாக்குதல்கள் நடத்தப்பட்டது. முதலில் இந்த பிரச்சனையில் பெரிதாக அக்கறை காட்டாத ஆஸ்திரேலிய அரசு அந்நாட்டுக்கு படிக்கும் வரும் இந்திய மாணவர்களின் எண்ணிக்கை விரைவில் குறைந்துவிடும் என்றால் செய்தியால் ஆடிப் போயுள்ளது.

வெளிநாட்டு மாணவர்கள் மூலம் கிடைக்கும் வருமானம் ஆஸ்திரேலியாவின் மூன்றாவது பெரிய இறக்குமதி தொழிலாகும். இந்த வருமானம் கெட்டு போக கூடாது என்பதில் தற்போது ஆஸ்திரேலியாவின் மும்முரமாக இருக்கிறது.

இதையடுத்து இந்தியர்களின் அன்புக்கும், விருப்பத்துக்கும் ஏற்ற நாடாக ஆஸ்திரேலியா மாற வேண்டும் என அந்நாடு கருதுகிறது. இதற்காக ஆஸ்திரேலியாவில் இந்திய மாணவர்கள் அதிகம் பாதிக்கப்பட்ட பகுதியான மெல்போர்ன் நகரின் மேற்கு பகுதியான மேரிபைர்னாங்கில் தீபாவளி கொண்டாடங்களுக்கு ஏற்பாடு செய்து வருகிறது.

இதற்காக தீபாவளி கொண்டாட்ட கமிட்டி ஒன்றையும் அமைத்துள்ளது. இதற்கு அந்நாட்டு பாராளுமன்ற உறுப்பினர் மர்ஷா தாம்ஷன் என்பவரை நியமித்துள்ளது.

அவர் கூறுகையில்,

இந்த தீபாவளி கொண்டாட்டம் நாட்டிலுள்ள இந்தியர்கள் அனைவருக்காக தான். இந்த நிகழ்ச்சி அக்டோபர் 3ம் தேதி நடக்கும். இதில் இந்திய மாணவர்கள், இந்திய சமூகத்தை சேர்ந்தவர்கள் மற்றும் ஆஸ்திரேலியாவை சேர்ந்தவர்களும் பங்கேற்பார்கள். ஆஸ்திரேலியாவின் பல கலாச்சாரத்தை பேணும் வகையில் இது நடத்தப்படுகிறது என்றார் அவர்.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X