ரெட்டி ஹெலிகாப்டர் விபத்து-விசாரணை துவங்கியது
ஹைதராபாத்: ஆந்திர முதல்வர் ராஜசேகர ரெட்டி விபத்தில் பலியான சம்பவம் குறித்த விசாரணை இன்று துவங்குகிறது.
கடந்த 2ம் தேதி நடந்த ஹெலிகாப்டர் விபத்தில் ஆந்திர முதல்வர் ராஜசேகர ரெட்டி மற்றும் அவருடன் சென்ற நான்கு பேரும் பலியானார்கள்.
இந்த விபத்து தொடர்பாக மத்திய அரசு விசாரணை நடத்த சிவில் விமானப் போக்குவரத்து இயக்குனரகம் (டிஜிசிஏ) விசாரணை கமிட்டி ஒன்றை அறிவித்துள்ளது. இதன் தலைவராக பவன் ஹான்ஸ் ஹெலிகாப்டர் நிறுவனத்தின் தலைவர் ஆர்கே தியாகி நியமிக்கப்பட்டுள்ளார்.
இது குறித்து ஆந்திர போலீசார் மற்றும் விமான போக்குவரத்துறை அதிகாரிகள் நேற்று விசாரணையை துவக்கினர்.
இந்த வழக்க்கில் நல்லமலா காட்டுபகுதியில் சிதறி கிடந்த ஹெலிகாப்டர் பாகங்களை ஆந்திரா சிபிஐ அதிகாரிகள் கர்னூல் மாவட்ட கலெக்டர் அலுவலகத்துக்கு கொண்டு வந்துள்ளனர்.
இது குறித்து கர்னூல் மாவட்ட கலெக்டர் முகேஷ் குமார் கூறுகையில்,
ஹெலிகாப்டரின் உடைந்த பாகங்கள் டிஜிசிஏயை சேர்ந்த விசாரணை குழுவிடம் ஒப்படைக்கப்பட இருக்கிறது. அவர்கள் இன்னும் இரண்டு நாட்களில் விபத்து நடந்த இடத்துக்கு சென்று மேலும் சில ஆய்வுகள் செய்யவிருக்கின்றனர்.
கர்னூல் மாவட்ட நிர்வாகம் தங்கள் வசம் இருந்த கருப்பு பெட்டியை விசாரணை குழுவிடம் நேற்று முன்தினம் ஒப்படைத்துவிட்டது. அவர்கள் அதை டெல்லிக்கு எடுத்து சென்று அதிலிருக்கும் தகவல்களை வெளி கொண்டு வரவிருக்கின்றனர்.
அதேபோல் எமர்ஜென்சி லொகேடர் டிரான்ஸ்மிட்டர் என்ற முக்கிய சாதனமும் அவர்களிடம் கொடுக்கப்பட்டுள்ளது.
மேலும், விபத்து நடந்த இடத்தில் விமானம் தொடர்பான ஆவணம், புகைப்படங்கள், வீடியோ ஆகியவற்றை டிஜிசிஏ குழுவிடம் கொடுக்கவிருக்கிறோம். இறந்தவர்களின் பிரேத பரிசோதனை அறிக்கையும் அவர்களிடம் கொடுக்கப்பட்டுள்ளது.
இந்த வழக்கு தொடர்பாக சிஐடி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். விபத்து நடந்த மலை பகுதியை போலீசார் மற்றும் மாவோயிஸ்ட்க்கு எதிரான படைகள் பாதுகாத்து வருகின்றன.
இந்த வழக்கு தொடர்பாக ஆத்மகூர் காவல் நிலையத்தில் 174வது பிரிவின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது என்றார்.
-
பத்திரப்பதிவில் இன்று முதல் புதிய ரூல்ஸ்! அதிகரிக்கும் சொத்து பதிவு செலவு! கலங்கும் நடுத்தர மக்கள் -
அந்த பேச்சு பேசின ஆதவ் அர்ஜுனா.. வில்லிவாக்கம் சம்பவத்தில் வாய் திறக்கலயே! கப்சிப் தவெக! -
ஏப்ரல் 1ம் தேதியான இன்று சம்பளம், கடன் எதுவுமே சாத்தியமில்லை... மக்கள் அறிய வேண்டிய உண்மை -
தங்கத்தை இப்போது வாங்கலாமா? இல்லை கொஞ்சம் காத்திருக்கலாமா? ஒரே வரியில் ஆனந்த் சீனிவாசன் விளக்கம் -
அண்ணாமலை போட்ட கண்டிஷன்.. அதிர்ந்துபோன டெல்லி.. கோவை வடக்குத் தொகுதியில் எகிறும் எதிர்பார்ப்பு -
Gold Loan: தங்க நகைக் கடன் இனி இவ்வளவுதான்! ரிசர்வ் வங்கியின் புதிய விதிகள் இன்று முதல் அமல்! -
தவெக கூட்டத்தில் மதுபாட்டில் வீச்சு.. சிக்கிய 2 பேர்.. யார் இவர்கள்? போலீஸ் சொன்ன ஷாக் தகவல் -
கண் முன்னே வெடிக்கும் உலக போர்! வளைகுடா மோதலில் உள்ளே வரும் உலக நாடுகள்.. உச்சக்கட்ட பதற்றம் -
ஈரானின் புதிய சுப்ரீம் லீடரும் மரணம்? குழப்பத்தில் பொதுமக்கள்.. ரஷ்யா தரப்பு சொன்ன முக்கியமான தகவல் -
அதிமுக பாஜகவை தோற்கடிப்போம்.. அண்ணாமலையின் அன்பு கூட்டம் தடாலடி முடிவு.. அதிர்ச்சியில் டெல்லி -
வருமான வரி படிவம் வெளியீடு.. மாத சம்பளம் வாங்குவோர், சிறு வணிகர்கள்.. அறிய வேண்டியவை -
கவனம் ஈர்த்த விஜயின் TVS XL.. ஓ இதுக்குத்தானா.. இதுலையும் ரஜினியை பார்த்து காப்பியா?












Click it and Unblock the Notifications