For Daily Alerts
Just In
காதலுக்காக கண்களில் தீ வைத்துக் கொண்ட காதலி!
திண்டுக்கல் மாவட்டம், நத்தம், காந்திஜி நகரைச் சேர்ந்தவர் மேனகா (18). இவரும், இதே பகுதியைச் சேர்ந்த ஆறுமுகமும் (20) கடந்த ஓரு வருடமாக காதலித்து வந்துள்ளனர். ஆனால், இவர்களது காதலுக்கு பெற்றோர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர்.
மேலும், காதலன் ஆறுமுகத்தை பார்க்க மேனகாவுக்கு அவரது பெற்றோர்கள் தடை போட்டனர்.
இதனால், மனமுடைந்த மேனகா காதலனை சந்திக்க முடியாத தனது கண்கள் தனக்கு தேவையில்லை என்று கூறி தனது கண்ணில் தீ வைத்துக் கொண்டார்.
இதையடுத்து தீ, முகம், கைகள், மார்பு என பரவி படுகாயம் அடைந்தார் மேனகா. உயிருக்கு ஆபத்தான நிலையில் அவரை மதுரை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்கு சேர்த்துள்ளனர். அங்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
Comments
Story first published: Sunday, September 6, 2009, 10:25 [IST]