திமுக ஆட்சியில் சட்டம் மக்களுக்கு எதிராக பாய்கிறது-வரதராஜன்
திருவாரூர்: தமிழக அரசின் சட்டங்கள் சமூக விரோதிகளுக்கு எதிராகச் செயல்படுவதைவிட சாதாரண மக்களுக்கு எதிராக அதிகமாக செயல்படுகிறது என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மாநில செயலாளர் வரதராஜன் குற்றம்சாட்டியுள்ளார்.
திருவாரூர் மாவட்டம், லட்சுமாங்குடியில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில், அரசியல் விளக்கப் பொதுக் கூட்டம் நடைபெற்றது. கூட்டத்தில் பங்கேற்ற வரதராஜன் பேசுகையில்,
இலங்கையில் உள்நாட்டு போர் முடிவுக்கு வந்து பல மாதங்களாகியும், இன்று வரை தமிழ் மக்கள் தங்களது இயல்பு வாழ்க்கைக்குத் திரும்ப முடியவில்லை. அதற்கான எந்த ஒரு செயலையும் இலங்கை அரசு முன்வந்து செய்யவில்லை.
இந்த மக்களின் வாழ்வுரிமையைப் பாதுகாக்கவும், மீட்டெடுக்கவும், இலங்கை அரசை மத்திய அரசு தொடர்ந்து வலியுறுத்த வேண்டும். அப்போது தான் தமிழர்களுக்கான நியாமான தீர்வு கிடைக்கும்.
இலங்கையில் ஆளும் அதிகாரவர்க்கம் தமிழ் மக்களுக்கு எதிராக நடத்தும் மனித உரிமை மீறல்களை தடுத்து நிறுத்தி, அவர்கள் சுதந்திரமாக வாழ மத்திய அரசு உரிய வழியை ஏற்படுத்தி தர வேண்டும்.
பணக்காரர்களுக்கு மட்டும் படிப்பு...
தமிழகத்தில் திமுக ஆட்சியில் ஊழல் நிறைந்துவிட்டது. சட்டம், ஒழுங்கு நிலைமை மிகவும் மோசமடைந்துள்ளது. கல்வி பணக்காரர்களுக்கு மட்டுமே கிடைக்கும் என்ற நிலையை உருவாக்கியுள்ளது.
மருத்துவம், பொறியியல் படிப்புக்கு லட்சக்கணக்கில் பணத்தை லஞ்சமாகக் கொடுக்க வேண்டியுள்ளது. இதைத் தடுக்க சட்டம் இயற்றிய தமிழக அரசு, அதை நடைமுறைப்படுத்தவில்லை.
தமிழக அரசின் சட்டங்கள் சமூக விரோதிகளுக்கு எதிராகச் செயல்படுவதைவிடச் சாதாரண மக்களுக்கு எதிராகத்தான் செயல்படுகிறது. இதை மக்கள் நீண்ட காலத்துக்கு அனுமதிக்கமாட்டார்கள் என்றார்.
-
தங்கம் vs ரியல் எஸ்டேட்.. கடைசி காலத்தில் நிம்மதியாக வாழ எது சிறந்தது? ஆனந்த் சீனிவாசன் ஈஸி விளக்கம் -
விரால் மீனின் ஸ்பெஷாலிட்டி இது.. பாம்பு தலையன் மீனுக்குள் அற்புதமான சீக்ரெட்! பெண்களின் வரப்பிரசாதம் -
ஜான் ஆரோக்கியசாமி போட்ட மெகா ஸ்கெட்ச்.. மிரண்டு போன பாஜக மேலிடம்.. B டீம் முத்திரையை உடைப்பாரா விஜய் -
திரிஷா சர்ச்சை அடங்குவதற்குள் மீண்டும் பரபரப்பு… காதல், கள்ளக்காதல் பற்றி பார்த்திபன் ஓபனாக பேச்சு -
அதிமுக எம்பியாக இருந்தபோதே கனிமொழி அக்கா எனக்கு பயிற்சி கொடுத்தார்.. ஓ.பி. ரவீந்திரநாத் -
சிறகடிக்க ஆசை: விஜயாவை பழிதீர்த்த கர்மா.. முத்துவால் ஏற்பட்ட குழப்பம்.. சந்தோஷத்தில் ரோகிணி -
மீண்டும் தள்ளிப்போகும் தேர்தல் தேதி அறிவிப்பு.. பின்னணியில் 3 காரணங்கள்.. தமிழகம் உள்பட 5 மாநில வாக்குப்பதிவு எப்போது? -
தவெகவில் பணக்கஷ்டம்.. ரூ.5 கோடி செலவு செய்ய வேட்பாளர்கள் இல்லை.. கூட்டணி செல்வது தான் சரி.. விஜய்க்கு அழுத்தம் -
Rasi Palan: கடகம், சிம்மம், கன்னிக்கு மார்ச் மாதத்தில் அடிக்குமா ஜாக்பாட்.. முழு பலன்கள் விவரம் -
அதில் இருந்தது கோழி கால் இல்லை.. சொமாட்டோ பிரியாணி பார்சலில் இருந்தது? அலற விட்ட 28 நிமிட வீடியோ -
சிங்காநல்லூர் வாய்ப்பில்லை.. பல்லடம் தொகுதியில் அண்ணாமலையை நிற்க சொல்லுங்க.. மறுக்கும் அதிமுக! -
Rasi Palan: துலாம், விருச்சிகம், தனுசு ராசிக்கான மார்ச் மாத பலன்.. முழு விவரம் இதோ












Click it and Unblock the Notifications