கணவன் மீது சந்தேகம்-தீக்குளித்து மனைவி தற்கொலை
Subscribe to Oneindia Tamil
திருவாரூர்: திருவாரூர் அருகே கணவர் மீது சந்தேகம் கொண்ட மனைவி ஒருவர் தீக்குளித்து தற்கொலை செய்து கொண்டார்.
திருவாரூர் அருகே ஆண்டார்பந்தி கீழத்தெருவை சேர்ந்தவர் செந்தில். இவரது மனைவி காஞ்சனா (27). இவர்களுக்கு 2 பெண் குழந்தைகள் உள்ளனர்.
கணவர் செந்திலின் நடத்தையில் கடந்த சில மாதமாக காஞ்சனாவுக்கு சந்தேகம் ஏற்பட்டுள்ளது. இதனால் கணவன், மனைவிக்கு இடையே அடிக்கடி குடும்ப தகராறு ஏற்பட்டது.
இந்நிலையில் வாழ்க்கையில் வெறுப்படைந்த காஞ்சனா தனது உடலில் மண்எண்ணையை ஊற்றி தீக்குளித்து தற்கொலை செய்து கொண்டார். தகவல் அறிந்த போலீசார் இந்த சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.












Click it and Unblock the Notifications