மெரீனாவில் மாயமான வைர வியாபாரி மனைவி
சென்னை: சென்னைக்கு சுற்றுலா வந்த இடத்தில் கொல்கத்தாவைச் சேர்ந்த வைர வியாபாரியின் இளம் மனைவி காணாமல் போய் விட்டார். அவரை யாரேனும் கடத்திச் சென்று விட்டனரா அல்லது கணவரே அவரை ஏதேனும் செய்து விட்டாரா என்பது குறித்து போலீஸார் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.
கொல்கத்தாவை சேர்ந்தவர் ஜெய்ஸ்வால் (26). வைர வியாபாரி. இவருக்கும் பிரியா (23) என்பவருக்கும் ஏப்ரல் 17ம் தேதி திருமணம் நடந்தது.
இதையடுத்து தேனிலவுப் பயணம் கிளம்பினர் ஜெய்ஸ்வால் தம்பதியினர். திருப்பதி, கன்னியாகுமரி, சென்று திரும்பிய அவர்கள் சென்னைக்கு வந்தனர்.
எழும்பர் அருங்காட்சியகம், கிண்டி சிறுவர் பூங்கா சென்ற பின்னர் மாலையில் மெரீனா கடற்கரைக்கு வந்தனர்.
மணலில் அமர்ந்து பேசிக் கொண்டிருந்தபோது பிரியா மட்டும் எழுந்து கடலை நோக்கிப் போயுள்ளார். ஆனஆல் போக வேண்டாம் என்று கூறி அழைத்துள்ளார் ஜெய்ஸ்வால். அப்போது பிரியாவின் பின்னால் சில வாலிபர்கள் போனதாக தெரிகிறது. சற்று நேரத்தில் பிரியாவைக் காணவில்லையாம்.
வழி தெரியாமல் பிரியா போய் விட்டாரோ என்ற எண்ணத்தில் கடற்கரையில் தேடிப் பார்த்துள்ளார் ஜெய்ஸ்வால். ஆனால் பிரியாவைக் காணவில்லை. இதையடுத்து அண்ணா சதுக்க போலீஸாரிடம் புகார் கொடுத்தார்.
போலீஸார் முதலில் ஜெய்ஸ்வாலை தீவிரமாக விசாரித்தனர். அப்போது சென்னைக்கு வந்தவுடன் பிரியாவுக்கும், ஜெய்ஸ்வாலுக்கும் இடையே சண்டை நடந்ததாக தகவல் தெரியவந்தது. இதையடுத்து அவரது செல்போனைப் பறிமுதல் செய்து அதை ஆய்வு செய்து வருகின்றனர்.
மேலும், பிரியாவை யாரேனும் கடத்திச் சென்று விட்டனரா என்ற கோணத்திலும் விசாரித்து வருகின்றனர்.












Click it and Unblock the Notifications