மெரீனாவில் மாயமான வைர வியாபாரி மனைவி
சென்னை: சென்னைக்கு சுற்றுலா வந்த இடத்தில் கொல்கத்தாவைச் சேர்ந்த வைர வியாபாரியின் இளம் மனைவி காணாமல் போய் விட்டார். அவரை யாரேனும் கடத்திச் சென்று விட்டனரா அல்லது கணவரே அவரை ஏதேனும் செய்து விட்டாரா என்பது குறித்து போலீஸார் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.
கொல்கத்தாவை சேர்ந்தவர் ஜெய்ஸ்வால் (26). வைர வியாபாரி. இவருக்கும் பிரியா (23) என்பவருக்கும் ஏப்ரல் 17ம் தேதி திருமணம் நடந்தது.
இதையடுத்து தேனிலவுப் பயணம் கிளம்பினர் ஜெய்ஸ்வால் தம்பதியினர். திருப்பதி, கன்னியாகுமரி, சென்று திரும்பிய அவர்கள் சென்னைக்கு வந்தனர்.
எழும்பர் அருங்காட்சியகம், கிண்டி சிறுவர் பூங்கா சென்ற பின்னர் மாலையில் மெரீனா கடற்கரைக்கு வந்தனர்.
மணலில் அமர்ந்து பேசிக் கொண்டிருந்தபோது பிரியா மட்டும் எழுந்து கடலை நோக்கிப் போயுள்ளார். ஆனஆல் போக வேண்டாம் என்று கூறி அழைத்துள்ளார் ஜெய்ஸ்வால். அப்போது பிரியாவின் பின்னால் சில வாலிபர்கள் போனதாக தெரிகிறது. சற்று நேரத்தில் பிரியாவைக் காணவில்லையாம்.
வழி தெரியாமல் பிரியா போய் விட்டாரோ என்ற எண்ணத்தில் கடற்கரையில் தேடிப் பார்த்துள்ளார் ஜெய்ஸ்வால். ஆனால் பிரியாவைக் காணவில்லை. இதையடுத்து அண்ணா சதுக்க போலீஸாரிடம் புகார் கொடுத்தார்.
போலீஸார் முதலில் ஜெய்ஸ்வாலை தீவிரமாக விசாரித்தனர். அப்போது சென்னைக்கு வந்தவுடன் பிரியாவுக்கும், ஜெய்ஸ்வாலுக்கும் இடையே சண்டை நடந்ததாக தகவல் தெரியவந்தது. இதையடுத்து அவரது செல்போனைப் பறிமுதல் செய்து அதை ஆய்வு செய்து வருகின்றனர்.
மேலும், பிரியாவை யாரேனும் கடத்திச் சென்று விட்டனரா என்ற கோணத்திலும் விசாரித்து வருகின்றனர்.
-
'மிஷன் இம்பாசிபிள்.. மெரினா டூ மடிப்பாக்கம்... பறக்கும் சென்னை.. தரம் தெரியாமல் மாறப்போகிறது! -
Gold Investors: தங்கம் விலை தொடர் சரிவு! முதலீட்டாளர்களுக்கு நஷ்டம்? என்ன நடக்கிறது? -
டெல்லி தந்த கிரீன் சிக்னல்.. 4 வழியாக மாறும் தமிழ்நாட்டின் மூன்று முக்கிய சாலைகள்.. மெகா பிளான்! -
வாகன ஓட்டிகளுக்கு குஷி.. தடம் தெரியாமல் மாறும் தமிழ்நாடு நெடுஞ்சாலைத் துறை? புது ப்ளூபிரிண்ட் ரெடி! -
சென்னை தங்க பஸ்சில் நடந்த சம்பவம்.. கொஞ்சம் பொறுப்போட நடங்க! பயணிகளுக்கு நெட்டிசன்கள் அட்வைஸ் -
சென்னை.. தேர்தல் பறக்கும் படையிடம் சிக்கிய "ஏகே 47.." விசாரணையில், யாரும் எதிர்பார்க்காத ட்விஸ்ட் -
பறவை காய்ச்சல் மனிதர்களுக்கு பரவுமா? சென்னையில் பீதி.. பொது சுகாதாரத்துறை விளக்கம் -
ரயில்கள் மீது கல் வீசினால் 10 ஆண்டு ஜெயில் தண்டனை.. சென்னை ரயில்வே கோட்டம் கடும் எச்சரிக்கை! -
திமுகவை விட 2% வாக்கு அதிகம்.. 3ம் இடத்திற்கு செல்கிறது அதிமுக.. புதிய டேட்டாவுடன் வந்த ஆதவ் அர்ஜுனா -
"தயவு செய்து தண்ணீரை கொடுங்க.." இந்தியாவிடம் கெஞ்சும் பாகிஸ்தான்.. பஞ்சம் மோசமாக தாக்கும் போல! -
முதல் விக்கெட்.. திமுக கூட்டணியில் விலகிய தமிழக வாழ்வுரிமை கட்சி.. அறிவித்தார் வேல்முருகன் -
இதுக்கு மேல கடன் வாங்க முடியாது.. கஜானா காலி.. தத்தளிக்கும் தமிழக வெற்றிக் கழகம்.. அப்போ விஜய்?












Click it and Unblock the Notifications