தனிப்பட்ட காரணம் ஏதுமில்லை-ராகுல்
சென்னை: முதல்வர் கருணாநிதியை சந்திக்காததற்கு தனிப்பட்ட காரணம் எதுவும் இல்லை. நான் மதிக்கும் தலைவர் அவர் என்று கூறியுள்ளார் காங்கிரஸ் பொதுச் செயலாளர் ராகுல் காந்தி.
இன்று காலை சென்னையில் செய்தியாளர்களைச் சந்தித்தார் ராகுல் காந்தி.
அப்போது முதல்வர் கருணாநிதியை மரியாதை நிமித்த்தமாக சந்திக்காதது ஏன் என்று செய்தியாளர்கள் கேட்டனர்.
அதற்குப் பதிலளித்த ராகுல் காந்தி, அப்படியெல்லாம் தனிப்பட்ட காரணம் எதுவும் இல்லை. முதல்வர் கருணாநிதி மூத்த தலைவர், நான் மதிக்கும் தலைவர் என்றார்.
பின்னர் ஒரு செய்தியாளர்கள், இளைஞர்கள்தான் நாட்டை வழிநடத்தப் போகிறார்கள் என்கிறீர்கள். ஆனால் அவர்களோ மதுவுக்கு அடிமையாக உள்ளனரே என்று கேட்டபோது, அந்தக் கேள்விக்குக் கண்டனம் தெரிவிப்பதாக கூறிய ராகுல் காந்தி, ஒரு சிலர்தான் அப்படி உள்ளனர். அதற்காக ஒட்டுமொத்தமாக இளைஞர் சமுதாயத்தைக் குறை சொல்லக் கூடாது.
நளினியை பார்க்கவே மாட்டேன்...
பிரியங்கா நளினியைப் பார்த்ததுபோல வேலூர் சிறைக்குச் சென்று நளினியைப் பார்ப்பீர்களா என்ற கேள்விக்குப் பதிலளித்த ராகுல் காந்தி,
நான் சென்னைக்கோ அல்லது தமிழகத்திற்கோ வரும்போதெல்லாம் நளினியை சந்திப்பீர்களா என்ற கேள்வி கேட்கப்படுகிறது.
எனக்கு எப்போதும் அப்படி ஒரு எண்ணம் வந்ததில்லை. திட்டம் இருந்ததில்லை. இனியும் இருக்கப் போவதில்லை. நான் நளினியை பார்க்கவே போவது இல்லை என்றார் ராகுல்.












Click it and Unblock the Notifications