முடிவுக்கு வருகிறது ஜெட் ஸ்டிரைக்-புக்கிங் துவங்கம்
மும்பை: பணியாளர்களின் கோரிக்கையை ஏற்பதாக அறிவித்துள்ளது ஜெட் ஏர்வேஸ். இதனைத் தொடர்ந்து மீண்டும் விமான டிக்கெட்டுகளுக்கான புக்கிங் மீண்டும் தொடங்கியது.
கடந்த இரு தினங்களாக ஜெட் ஏர்வேஸ் விமானிகள் ஒட்டுமொத்த விடுப்பில் சென்றுவிட்டதால், ஜெட் ஏர்வேஸின் விமானப் போக்குவரத்தே ஸ்தம்பித்துப் போய்விட்டது. வேலையிலிருந்து நீக்கப்பட்ட விமானிகளை மீண்டும் பணிக்கு எடுத்துக் கொள்ள வேண்டும் என்பதே இவர்களின் கோரிக்கையாக இருந்தது.
இந்நிலையில், விமானிகள் சங்க நிர்வாகிகளுடன் பேச்சு நடத்தியது ஜெட் ஏர்வேஸ் நிர்வாகம். இந்தப் பேச்சில் சுமூகமான நிலை ஏற்பட்டுள்ளதாக விமானிகள் சங்கத்தின் தலைவர் கௌசிக் தெரிவித்தார்.
நீக்கப்பட்ட 4 விமானிகளையும் நிபந்தனையின்றி மீண்டும் சேர்த்துக்கொள்ள ஜெட் நிர்வாகம் ஒப்புக் கொண்டுள்ளதாகவும் அவர் கூறினார். இதனைத் தொடர்ந்து இன்று நடைபெறும் பேச்சுவார்த்தையின் போது ஜெட் ஏர்வேஸ் விமானிகளின் ஸ்டிரைக் வாபஸ் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் என்று தெரிகிறது.
ஸ்டிரைக் வாபஸ் பெற்றதாக அறிவிப்பு வந்த அடுத்த வினாடியே வேலைக்கு திரும்ப தயாராக இருப்பதாக, ஜெட் ஏர்வேஸ் நிறுவன பணியாளர்களும் தெரிவித்துள்ளனர். ஏற்கெனவே பொருளாதார மந்தம் போன்ற பிரச்சினைகளால் சம்பளம் வருவதே சிக்கலாக உள்ள சூழலில் இந்த ஸ்ட்ரைக்கை சீக்கிரம் முடிவுக்குக் கொண்டுவருவது முக்கியம் என்று பணியாளர்கள் தெரிவித்துள்ளனர்.
டிக்கெட் புக்கிங் துவங்கியது!
இதற்கிடையே ஜெட் ஏர்வேஸ் விமானங்களுக்கான டிக்கெட் புக்கிங் இன்று துவங்கியது. இதில்
நாளை அலகாபாத்தில் இருந்து டில்லிக்கு செல்லும் விமானங்களுக்கும், ராஜ்கோட்டிலிருந்து மும்பை செல்லும் விமானங்களுக்குமான டிக்கெட் புக்கிங்கை இந்நிறுவனம் துவக்கியது.