பஞ்சாபில் மிக்-21 விமானம் விழுந்து விமானி பலி
பலியான அந்த விமானியின் பெயர் லெப்டினன்ட் மனு அகோரி. அவரால் விபத்தின் போது சரியான நேரத்தில் வெளியே குதிக்குமுடியாமல் போனதால் அவர் பலியாகியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இது இந்த ஆண்டில் விபத்துக்குள்ளாகும் 7வது இந்திய போர்விமானமாகும். முன்னதாக முதல் 8 மாதங்களில் சூர்ய கிரண் பயிற்சி விமானம், சுகோய்-30 எம்கேஐ, மிக்-27, மிக்-21, ஏஎன்-32 உள்ளிட்ட 6 விமானங்கள் விபத்துக்குள்ளாகி இருந்தன.
தற்போது விபத்துக்குள்ளான மிக்-21 ரக விமானங்கள் ரஷ்யாவிடம் லைசென்ஸ் பெற்று இந்தியாவில் உருவாக்கப்பட்டது. இதை பல ஆண்டுகளாக இந்தியா விமான படை தொடர்ந்து பயன்படுத்தி வருகிறது.
இந்த விமானத்தின் திறனை அதிகரிக்கும் பணியில் கடந்த 2003 முதல் ரஷ்ய வல்லுனர்கள் ஈடுபட்டு வருவதால் இந்த ரக விமானங்கள் விபத்துக்குள்ளாவது தற்போது வெகுவாக குறைந்துள்ளதாக கூறப்படுகிறது.
தற்போது இந்திய விமான படையில் 200 மிக்-21 ரக விமானம் இருக்கிறது.