மதுரையில் மாணவர்கள் ஆவேசம்-சீனக் கொடி எரிப்பு
மதுரை: இந்திய எல்லைப் பகுதியில் சீனா அத்து மீறி ஊடுருவி வருவதாக கூறி சீன அரசைக் கண்டித்து, அந்த நாட்டு கொடியை மதுரையில் மாணவர்கள் எரித்தனர்.
இந்திய எல்லைப் பகுதியில் சீனா அத்து மீறி ஊடுருவி வருவதாக அகில இந்திய வித்தியார்த்தி பரிஷத் (ஏபிவிபி) அமைப்பு குற்றம் சாட்டியுள்ளது.
ஏபிவிபி அமைப்பை சேர்ந்த மாணவர்கள், சீன கொடி எரிப்பு போராட்டம் அறிவித்தனர். அதன்படி, மதுரை ஜான்சிராணி பூங்கா அருகே மாணவர்கள் குவிந்தனர். இந்த ஆர்பாட்டத்திற்கு அமைப்பின் மாவட்ட நிர்வாகி முத்து சாமுண்டீஸ்வரன் தலைமை வகித்தார்.
இந்திய எல்லைக்குள் அத்துமீறி நுழையும் சீன ராணுவம் மற்றும் அந்நாட்டு அரசைக் கண்டித்து கோஷங்கள் எழுப்பப்பட்டன. அப்போது, மாணவர்கள் ஆவேசத்துடன் சீன நாட்டுக் கொடியை எரித்தனர்.
இந்த ஆர்பாட்டத்தில் அந்த அமைப்பைச் சேர்ந்த நிர்வாகிகள் ஆதிசேஷன், வீரபாண்டி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.












Click it and Unblock the Notifications