ஜார்ஜ்-தயா மாஸ்டருக்கு இலங்கை கோர்ட் ஜாமீன்

ஜார்ஜ் மாஸ்டர், சுப. தமிழ்ச்செல்வனின் மொழிபெயர்ப்பாளராக இருந்தவர். வன்னியில் இறுதிப் போர் நடைபெற்றபோது, புதுமாத்தளன் பகுதியைப் படையினர் கைப்பற்றியபோது இந்த இருவரும் கைது செய்யப்பட்டனர்.
நோய் வாய்ப்பட்ட நிலையில் இருந்த இருவரையும் மருத்துவமனையில் இருந்து படையினர் தூக்கிச் சென்று விட்டனர் என விடுதலைப் புலிகள் அப்போது தெரிவித்திருந்தனர். ஆனால், அவர்கள் இருவரும் தம்மிடம் சரணடைந்தனர் என படையினர் அறிவித்திருந்தனர்.
கடந்த ஐந்து மாதங்களாக இருவரும் விசாரணைக்கு உட்படுத்தப்பட்டிருந்த நிலையில் நேற்று கொழும்பு கோர்ட்டி்ல இருவரும் ஆஜர்படுத்தப்பட்டனர்.
அப்போது இருவருக்கும் நீதிபதி நிபந்தனை ஜாமீன் வழங்கினார். அதன்படி, இருவரும் தலா 25 லட்சம் ரூபாய் ரொக்க ஜாமீன் மற்றும், மாதந்தோறும் காவல்துறையிடம் கையெழுத்திட வேண்டும், பாஸ்போர்ட்டுகளை ஒப்படைக்க வேண்டும், என்று நிபந்தனை விதிக்கப்பட்டது.












Click it and Unblock the Notifications