தருமபுரியில் தனியார் டாக்டர்கள் ஸ்டிரைக்!
Subscribe to Oneindia Tamil
தர்மபுரி: தருமபுரி மாவட்ட தனியார் மருத்துவமனை மருத்துவர்கள் திடீர் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளனர்.
தர்மபுரி மாவட்டத்தில் உள்ள உமா சங்கர் குழந்தைகள் நல மருத்துவமனையைச் சேர்ந்த மருத்துவர் உமா சங்கர் மீது 3 பேர் கொண்ட மர்ம கும்பல் தாக்குதல் நடத்தியது.
இந்த தாக்குதலில் ஈடுபட்ட மர்ம கும்பலை உடனடியாக கைது செய்ய வேண்டும் என்று தர்மபுரி மாவட்ட தனியார் மருத்துவமனை டாக்டர்கள் தமிழக அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.
மேலும், இந்த கோரிக்கையை வலியுறுத்தி திடீர் வேலைநிறுத்தத்திலும் ஈடுபட்டுள்ளனர்.
இதனால் பலவித நோய்களால் பாதிக்கப்பட்ட பொது மக்கள் முதலுதவி மற்றும் பொது சிகிச்சை பெற மிகவும் அவதிப்பட்டு வருகின்றனர்.












Click it and Unblock the Notifications