சென்னை-விபத்தில் டிவி கேமராமேன், 2 பேர் பலி
சென்னை: சென்னையில் இன்று காலை நடந்து மூன்று விபத்துக்களில் தனியார் டிவி கேமராமேன் உட்பட மூன்று பேர் பலியானார்கள்.
அந்த கேமராமேனின் பெயர் நல்லதுரை (36). சென்னை ஜயப்பன்தாங்கலை சேர்ந்த அவர் ஒரு தனியார் தொலைகாட்சியில் வேலை பார்த்து வந்தார்.
இந்நிலையில் அவர் இன்று காலை ஆற்காடு சாலையில் ஆவிச்சி பள்ளி அருகே சென்று கொண்டிருந்த போது ஷேர் ஆட்டோ மோதி தலையில் பலத்த அடிபட்டு பலியானதாக கூறப்படுகிறது.
இதையடுத்து கிண்டி போலீசார் பிரேதத்தை கைப்பற்றி, வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
மற்றொரு விபத்தில் அண்ணா நகருக்கு ஒரு வழக்கு விசாரணைக்காக சென்று கொண்டிருந்த எம்கேபி நகர் காவல் நிலைய ஏட்டு கார் மோதி பலியானார். அவரது டேனியல் ராஜ்(45).
அதேபோல் முகப்பேரை கொத்தனார் ஒருவரும் சாலை விபத்தில் பலியானார். அவரது பெயர் பிரபு. 26 வயதான அவர் ராஜமங்கலம் தாதங்குப்பம் அருகை பைக்கில் சென்று கொண்டிருந்தார்.
அப்போது 200 அடி சாலையில் வந்த லாரி ஒன்று அவர் மீது மோதியது. இதில் அவர் சம்பவ இடத்திலே பரிதாபமாக இறந்தார்.