ஐ.நா மூத்த அதிகாரி இலங்கை பயணம்!
ஐக்கிய நாடுகள் சபை: ஐக்கிய நாடிகள் சபையின் மூத்த அதிகாரி விரைவில் இலங்கைக்குச் சென்று முகாம்களில் உள்ள தமிழரின் நிலை குறித்து ராஜபக்சவுடன் பேசுகிறார்.
அந்த அதிகாரியின் பெயர் பி லின் பாஸ்கோ. ஐக்கிய நாடுகள் சபையின் அரசியல் விவகாரங்களுக்கான பொறுப்பில் இருப்பவர். ஏற்கெனவே கடந்த மே மாதம் இலங்கைக்கு சென்றுள்ளார் பாஸ்கோ.
ஐநா செயலர் பான் கி மூனின் வேண்டுகோளின்படி இம்முறையும் இந்தப் பயணத்தை மேற்கொள்கிறார்.
போருக்குப் பின் முகாம்களில் அடைக்கப்பட்டுள்ள தமிழர்களை மீண்டும் அவர்களின் சொந்த வாழிடங்களுக்கே மறுகுடியேற்றம் செய்ய வேண்டும் என்று ஐநா சார்பில் மகிந்த ராஜபக்சவிடம் வலியுறுத்துவார் பாஸ்கோ என ஐநா செய்திக் குறிப்பு தெரிவித்துள்ளது.
இன்று புறப்படும் அவர் நாளை வன்னி முகாம்களைப் பார்வையிடக் கூடும். நாளையே ராஜபக்சவையும் சந்திக்கிறார், என அந்த செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications