சுய உதவிக் குழுக்களுக்கு ஐ.ஓ.பி. ரூ. 2,223 கோடி
Subscribe to Oneindia Tamil
சென்னை: 800 உறுப்பினர்களை கொண்ட 49 மகளிர் சுய உதவிக் குழுக்களுக்கு இந்தியன் ஓவர்சீஸ் வங்கி ரூ.81.52 லட்சம் கடனுதவி வழங்கியது.
இதற்கான விழா எழும்பூர் எத்திராஜ் கல்லூரி அரங்கத்தில் நடந்தது.
இதில் சென்னை, காஞ்சீபுரம், வேலூர், திருவண்ணாமலை உள்ளிட்ட ஊர்களைச் சேர்ந்த மகளிர் குழுக்களுக்கு கடனுதவி வழங்கப்பட்டது.
இந்தியன் ஓவர்சீஸ் வங்கி அகில இந்திய அளவில் 2,97,327 மகளிர் சுய உதவிக்குழுக்களுக்கு ரூ. 2,223 கோடி கடனுதவி வழங்கியுள்ளது குறிப்பிடத்தக்கது.
மேலும் 2009ம் ஆண்டின் முதல் காலாண்டு வரை 4,820 சுய உதவிக் குழுக்களுக்கு ரூ.60.59 கோடி நிதியுதவி வழங்கியுள்ளது.












Click it and Unblock the Notifications