ஒருவழியாய் 5000 புள்ளிகளைத் தொட்ட நிப்டி
Subscribe to Oneindia Tamil

காலையில் வர்த்தகம் துவங்கியதும் சென்செக்ஸ் 111 புள்ளிகள் உயர்ந்து 16790-ஐக் கடந்தது. ஏசிசி மற்றும் ரிலையன்ஸ் கம்யூனிகேஷன்ஸ் பங்குகள், நல்ல லாபத்தில் கைமாறின. டாடா பவர் பங்குகள் 2.5 சதவிகித லாபத்தில் விற்பனையாகின.
ஜெய்ப்பிரகாஷ் அஸோஸியேட்ஸ், எச்சிஎல், சீமென்ஸ், ரான்பாக்ஸி, ஐடியா செல்லுலர் போன்ற நிறுவனப் பங்குகளும் லாபத்தில் கைமாறின.
ஆனால் ரிலையன்ஸ் இன்டஸ்ட்ரீஸ் பங்குகள் மட்டும் தொடர்ந்து நஷ்டத்திலேயே விற்கப்பட்டன. பிபிசிஎல், எச்டிஎப்சி, பஞ்சாப் நேஷனல் வங்கி, ஹீரோ ஹோண்டா போன்ர பங்குகளும் நஷ்டத்தைச் சந்தித்தன.
நிப்டி மீண்டும் 5000 புள்ளிகளைத் தொட்டதும் பங்கு முதலீட்டாளர்கள் பெரும் மகிழ்ச்சியடைந்தனர். பொதுவாகவே இந்த வாரம் ஆசியப் பங்குச் சந்தைகள் ஓரளவு நிலைத்த போக்குடன் இயங்கத் தொடங்கியுள்ளன.












Click it and Unblock the Notifications