For Daily Alerts
Just In
லண்டனில் மேலும் 5 புதிய கிளைகள் - ஸ்டேட் வங்கி திட்டம்
மும்பை: இந்தியாவின் மிகப் பெரிய வங்கியான பாரத ஸ்டேட் வங்கி, இங்கிலாந்தில் மேலும் ஐந்து கிளைகளைத் திறக்கவுள்ளது.
இதுகுறித்து பாரத ஸ்டேட் வங்கியின் தலைவர் ஓ.பி.பட் கூறுகையில், ஏற்கனவே இங்கிலாந்தில் எங்களுக்கு ஏழு கிளைகள் உள்ளன. விரைவில் இன்னொரு கிளையும், அடுத்த மாதம் இன்னொன்றும் திறக்கப்படும். அடுத்த ஆண்டு ஜூன் மாதத்திற்குள் நான்கு கிளைகளைத் திறக்கத் திட்டமிட்டுள்ளோம்.
தற்போது இங்கிலாந்தில் உள்ள எங்களது கிளைகளின் வர்த்தகம் 3 பில்லியன் டாலராக உள்ளது.
அடுத்த ஆண்டுக்குள் கனடா, அமெரிக்கா, மாலத்தீவுகள், இலங்கை, ஹாங்காங் உள்ளிட்ட நாடுளில் 40 புதிய சர்வதேச கிளைகள் திறக்கப்படும்.
இந்த நிதியாண்டில், எங்களது கிளைகள் மூலம் கிடைத்துள்ள மொத்த சர்வதேச வர்த்தகத்தின் அளவு 10 சதவீதம் அதிகமாக இருக்கும். கடந்த ஆண்டு இது 8 சதவீதமாக இருந்தது என்றார்.
Comments
Story first published: Thursday, September 17, 2009, 15:28 [IST]