Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

முகாம் அவலம்-இலங்கைக்கு ஐ.நா நெருக்குதல்

Subscribe to Oneindia Tamil

கொழும்பு இடம் பெயர்ந்தோர் முகாம்களில் அடைக்கப்பட்டுள்ள 3 லட்சம் தமிழர்களின் அடிப்படை உரிமைகளை அவர்களுக்கு திரும்ப வழங்க வேண்டும். அவர்களுக்குத் தேவையான வசதிகளைச் செய்து தர வேண்டும். விரைவில் அவர்களை சொந்த ஊர்களுக்கு அனுப்பி வைக்க வேண்டும்என்பதை இலங்கை அரசிடம் வலியுறுத்துவதற்காக ஐ.நா அரசியல் பிரிவு தலைவர் லின் பாஸ்கோ கொழும்பு வந்துள்ளார்.

ஐ.நா. அரசியல் விவகாரப் பிரிவின் இணைச் செயலாளராக இருக்கிறார் பாஸ்கோ. நேற்று கொழும்பு வந்த அவர் 3 நாள் இங்கு பயணம் மேற்கொள்கிறார்.

முகாம்களில் தங்கியுள்ள தமிழர்களை விரைவில் மறு குடியமர்த்தத் தேவையான நடவடிக்கைகளை விரைவுபடுத்தமாறு இலங்கை அரசு அவர் வலியுறுத்தவுள்ளார்.

இதுகுறித்து இலங்கைக்கான ஐ.நா. செய்தித் தொடர்பாளர் கார்டன் வெய்ஸ் கூறுகையில், ஐ.நா. பொதுச் செயலாலரிடம், இலங்கை அதிபர் ராஜபக்சே கடந்த மே மாதம் கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்ற வேண்டும். அதை வலியுறுத்துவதற்காகவே தற்போது பாஸ்கோ கொழும்பு வந்துள்ளார்.

அரசியல் மறு சீரமைப்பு நடவடிக்கைகள் மிகவும் மெதுவாக நடந்து வருவது குறித்து ஐ.நா. பொதுச் செயலாளர் கவலை தெரிவித்துள்ளார்.

மனித உரிமைகளை இலங்கை அரசு மதிக்க வேண்டும். தனது கடமையிலிருந்து அது விலகக் கூடாது என்றார்.

இந்த ஆண்டு இறுதிக்குள் 80 சதவீத தமிழர்கள் முகாம்களிலிருந்து சொந்த ஊர்களுக்கு அனுப்பப்பட்டு விடுவர் என பான் கி மூனுக்கு இலங்கை அரசு ஏற்கனவே உறுதி அளித்துள்ளது. ஆனால் அதுதொடர்பான நடவடிக்கைகள் மிக மிக மெதுவாக நடந்து வருகின்றன.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+