தர்மம் இன்றியமையாதது: விஜயகாந்த்
Subscribe to Oneindia Tamil
சென்னை: என் வருமானத்தில் ஒரு பகுதியை எப்போதுமே ஏழைகளுக்கு வழங்கி வருகிறேன் என்று தேமுதிக தலைவர் விஜய்காந்த் கூறினார்.
தேமுதிக சார்பில் இப்தார் நோன்பு திறப்பு நிகழ்ச்சி சென்னை துறைமுகம் மரைக்காயர் தெருவில் உள்ள ஆஷா மண்டபத்தில் நடைபெற்றது.
அதில் விஜய்காந்த் பேசுகையில்
எனக்கு சிறுவயது முதலே இஸ்லாமிய நண்பர்கள் அதிகம். இதுபோன்ற இப்தார் நோன்பு நிகழ்ச்சிகளில் நான் வருடந்தோறும் கலந்து கொள்வதுண்டு.
தர்மம் இன்றியமையாதது. நம் உழைப்பில் கிடைக்கும் வருமானத்தின் ஒரு பகுதியை ஏழைகளுக்கு தர்மம் செய்ய வேண்டும் என்று நபிகள் நாயகம் சொல்லியிருக்கிறார். அதன்படி நானும், என்னுடைய வருமானத்தில் ஒரு பகுதியை ஏழைகளுக்கு உதவி செய்து வருகிறேன்.
நான் அனைத்து மதங்களையும் மதிப்பவன். இந்த நிகழ்ச்சியில் கலந்து கொள்வதில் உண்மையிலேயே எனக்கு மிக மகிழ்ச்சியாக உள்ளது என்றார்.












Click it and Unblock the Notifications