தமிழகத்தில் சிக்குன்குன்யா பரவுகிறது-63 பேர் பாதிப்பு
பாதிக்கப்பட்ட இவர்கள் அனைவரும் கீழக்கரை மற்றும் அதன் சுற்றுப் பகுதி கிராமங்களைச் சேர்ந்தவர்கள் ஆவர். இவர்களுக்கு சிக்குன்குன்யா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளதாக சுகாதாரத் துறை துமை இயக்குநர் உமா மகேஸ்வரி தெரிவித்தார்.
உறுதி செய்யப்பட்ட 63 பேரின் ரத்த மாதிரிகளும் விருதுநகர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டிருந்தன. அங்கு இவர்களுக்கு சிக்குன்குன்யா பாதிப்பு ஏற்பட்டிருப்பது உறுதிப்படுத்தப்பட்டது.
இவர்களில் சிலர் தாங்களாகவே மருத்துவமனைகளில் சேர்ந்துள்ளனர். இருப்பினும் பலர் அசு மருத்துவமனையில் சிகிச்சைக்கு சேர தயக்கம் காட்டுகின்றனர் என்றும் உமா மகேஸ்வரி தெரிவித்தார்.
இதுகுறித்து அவர் கூறுகையில் சரியாக எத்தனை பேருக்கு சிக்குன்குன்யா பாதிக்கப்பட்டிருக்கிறது என்று எஙகளுக்குத் தெரியவில்லை. சிக்குன்குன்யா மேலம் பரவாமல் தடுக்கத் தேவையான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன என்றார்.
இதற்கிடையே, இதே பகுதியில் டெங்கு காய்ச்சலும் பரவி வருகிறது.
ஏற்கனவே பன்றிக் காய்ச்சல் பீதி இன்னும் விலகாத நிலையில் தமிழகம் முழுவதுமே பரவலாக காய்ச்சல் வெகு வேகமாக பரவி வருகிறது. இது எந்த வகையான காய்ச்சல் என்று தெரியாத நிலையில் தற்போது சிக்குன்குனியாவும், டெங்குவும் பரவத் தொடங்கியிருப்பது மக்களை பீதிக்குள்ளாக்கியுள்ளது.
இந்த நோய் Aedes aegypti என்ற வகை கொசுவால் தான் பரவுகிறது என்பது குறிப்பிடத்தக்கது. கொசுக் கடியிலிருந்து தப்பினால் இந்த நோயிலிருந்தும் கொஞ்சம் தப்பலாம்.